Skip to main content

உலக அமைதியை சீர்குலைக்கும் தீவிரவாத இயக்கத்தை... -ஓ.பன்னீர்செல்வம்

Published on 27/02/2019 | Edited on 27/02/2019

 

புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இந்த தாக்குதலை பாராட்டி  ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 
 

உலக அமைதியை சீர்குலைக்கும் தீவிரவாத இயக்கத்தை ஒருபோதும் நம்மண்ணில் அனுமதிக்க கூடாதென, அதிரடி தாக்குதல்களை முன்னெடுத்து, பயங்கரவாத தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய விமானப்படை வீரர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

சார்ந்த செய்திகள்