ADVERTISEMENT

பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய சத்துணவு பணியாளர்கள்..

11:13 AM Oct 27, 2018 | bagathsingh

காலமுறை ஊதியம் வழங்கு என்ற கோரிக்கையுடன் நேற்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கிய சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு மாலை விடுதலை செய்யப்பட்ட நிலையில் இரவிலும் போராட்டத்தை தொடர்ந்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் காலமுறை ஊதியம் வழங்கு, பென்சன் வழங்கு, ஓய்வூதியம் வழங்கு என்பன உள்ளிட்ட கோரிக்கை பதாகைகளை கழுத்தில் தொங்கவிட்டபடியே பிச்சை எடுக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை நாங்கள் வீட்டுக்கு போகமாட்டோம் என்று இன்று இரவிலும் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT