Skip to main content

கடல் கடந்தும், காலம் கடந்தும்... வாழ்பவர்... செவிலியர்களுக்கு மலர் தூவி மரியாதை

Published on 12/05/2020 | Edited on 12/05/2020

 

அன்பு, கருணை, சேவை இவை அனைத்தையும் கொண்ட மனித கடவுளாக இப்பூமியில் தோன்றியவர்தான் இத்தாலியை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல். உலகத்தில் உள்ள அனைத்து செவிலியர்களுக்கும் அன்னை என்று போற்றப்படுபவர். 18ம் நூற்றாண்டில் மருத்துவ வளர்ச்சி என்பது சொல்லும்படி இல்லை. அந்த காலகட்டத்தில் மருத்துவத்தில் செவிலியராக பணிபுரிவதில் பெருமையுடன் அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.


1853 முதல் 1956 வரை ரஷ்யா உட்பட சில நாடுகளில் போர் நடந்தது. அப்படி நடந்த போரில் பல வீரர்கள் காயமுற்றனர். அவர்களுக்கு அரசுகளின் எதிப்பையும் மீறி மருத்துவ உதவி செய்ய போர்களத்தில் தன்னுடன் 36 செவிலியர்களோடு இறங்கினார். காயமுற்று கிடக்கும் வீரர்களை இரவு நேரத்திலும் லாந்தர் விளக்கை கையில் ஏந்தி அவர்களை கண்டுபிடித்து மருத்துவ சேவையாற்றினார். அதில் ஏராளமான வீரர்கள் உயிர் பிழைத்தனர். முதன்முதலாக நர்சிங் கல்லூரி ஏற்படுத்தினார்.
 
வாழ்நாள் முழுக்க திருமணம் செய்து கொள்ளாமல் செவிலியர் பணியை காதலித்து வாழ்ந்தார். அப்படிப்பட்ட செவிலியர்களின் அன்னையான பிளாரன்ஸ் நைட்டிங்கேல் 1820 ம் ஆண்டு மே - 12ந் தேதி பிறந்த அவருக்கு இன்று 200வது பிறந்த நாள். இந்த நாளை உலகம் முழுக்க உள்ள செவிலியர்கள் கொண்டாடியுள்ளார்கள்.

 

 


ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்கள் கேக் வெட்டியும், கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியும், செவிலியர்களாக பணி செய்து வாழ்வதில் பெருமை கொள்கிறோம், எங்கள் அன்னை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் புகழை என்றென்றும் காப்போம் என உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர்.

 


மக்கள் ராஜன் என்பவரது தலைமையிலான உணர்வுகள் அமைப்பை சேர்ந்தவர்கள் செவிலியர்கள் மீது பூக்களை தூவி மரியாதை செலுத்தினார்கள். கடவுளுக்கு நிகராக கருத்தப்படும் மருத்துவத்துறையில் உயிர்நாடியாக வாழும் செவிலியர்களால்தான் உலகையே மிரட்டும் கொடிய கரோனாவை விரட்டும் போர் வீரர்களாக களத்தில் இருந்து பாடுபடுகிறார்கள். 

 

 

தன்னலமற்ற சேவையால், அர்பணிப்போடு வாழ்ந்த செவிலியர்களின் அன்னை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் கடல்கள் கடந்தும், காலம் கடந்தும் மனித சமூகத்தில் வாழ்ந்து வருகிறார்.

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.