Advertisment

நெருங்கும் மாண்டஸ்; புதுச்சேரி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Number two storm warning cage hoisted at Puducherry port

Advertisment

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 'மாண்டஸ்' எனும் புயலாக வலுவடைந்துள்ளது. இப்புயல் காரைக்காலுக்கு கிழக்கு-தென்கிழக்கில் 500 கிலோமீட்டர் தூரத்திலும், சென்னையில் இருந்து 580 கிலோமீட்டர் தூரத்திலும் நிலை கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஸ்ரீஹரிகோட்டா மற்றும் புதுச்சேரி இடைப்பட்ட கடலோர பகுதிகளில் 9 ஆம் தேதி இரவு அல்லது 10 ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . இதன் காரணமாக புதுச்சேரிதுறைமுகத்தில் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளது என்பதைக் குறிக்கும் வகையில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

cyclone rain Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe