குரங்கணி காட்டுத்தீ விபத்தில்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு

kuu

குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது.

தேனி மாவட்டம் குரங்கணி காட்டில் கடந்த 11ம் தேதி ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கினர். இவர்களில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

தீயில் சிக்கி தவித்துக்கொண்டிருந்தவர்கள் மீட்கப்பட்டு, மதுரை, கோவை, சென்னை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அடுத்துடுத்து உயிருழப்புகள் அதிகரித்துக்கொண்டே இருந்தன. இந்நிலையில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னையை சேர்ந்த சுவேதா என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதன் மூலம் குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 -ஆக அதிகரித்துள்ளது.

accident deaths Monkey wildfire
இதையும் படியுங்கள்
Subscribe