சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், "ஒரு மாதத்திற்கு மேலாக குறைந்த கரோனா எண்ணிக்கை, தற்போது சற்று உயர்ந்துள்ளது. கரோனா உயர்வுக்கான காரணங்களைக் கண்டறிய மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் கட்டுப்பாடாக இல்லை என்பது வருத்தமான விஷயம்தான். மக்கள் சிலர் கவனக்குறைவாக உள்ளனர்; முகக்கவசம், சமூக இடைவெளியை முறையாகப் பின்பற்ற வேண்டும். கேரள மாநில எல்லையிலிருந்து வருபவர்களைத் தொடர்ந்து கண்காணித்துவருகிறோம்" எனதெரிவித்தார்.
கரோனா எண்ணிக்கை தற்போது சற்று உயர்ந்துள்ளது - அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சு!
Advertisment