Advertisment

கலைஞர் குறித்து அவதூறு; சீமான் மீதான விசாரணை தொடக்கம்

ntk

அண்மையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து பாடிய பாடல் சர்ச்சை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் சீமான் மீது புகார்கள் கொடுக்கப்பட்டிருந்தது.அதேநேரம் ஆவடி காவல் ஆணையகரத்திற்கு உட்பட்ட பட்டாபிராம் காவல் நிலையத்தில் அஜய் என்பவர் புகார் ஒன்றைக் கொடுத்திருந்தார்.

Advertisment

அந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என புகார் கொடுத்த அஜய் எஸ்சி/ எஸ்டி ஆணையத்தில் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரின் மீது விசாரணை நடத்திய எஸ்சி/எஸ்டி ஆணையம் ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள் ஆவடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பட்டாபிராம் போலீசார் காவல் நிலைய போலீஸ் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் பட்டாபிராம் போலீசார் சீமான் மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Advertisment

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பதிவு செய்யப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையானது தொடங்கியுள்ளது. சீமானுக்கு சம்மன் அனுப்பி இதுதொடர்பாக விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் நேற்று விசாரணை அதிகாரியாக பட்டாபிராம் காவல் உதவி ஆணையர் சுரேஷ்குமாரநியமிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சீமானுக்கு சம்மன் அனுப்பி இது தொடர்பாக விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

police seeman
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe