புதுச்சேரி முத்தியால்பேட்டை சின்னையாபுரம் ஆர்.கே.தோட்டம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் நாகராஜன்(38) என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சார்ந்த இவர் நேற்று மாலை தனது பிள்ளைகளை டியூசனுக்கு கொண்டு போய் விடுவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றார்.
வீட்டில் இருந்து கொஞ்ச தூரம் சென்ற நிலையில் அவரை மர்ம நபர்கள் 4 பேர் வழி மறித்து சரமாரியாக தாக்கினார்கள். தாக்குதலில் தடுமாறி கீழே விழுந்த நாகராஜனை சுற்றி வளைத்து கத்தி, வீச்சரிவாள் ஆகிய ஆயுதங்களால் தாக்க முயன்றனர்.
அப்போது அவர்களிடம் இருந்து தப்பித்து தனது வீட்டை நோக்கி ஓடினார் நாகராஜன். கொலையாளிகள் விடாமல் விரட்டிச் சென்று வீட்டின் நுழைவு வாயில் அருகே வைத்து அவரை சரமாரியமாக வெட்டினர். இதில் நாகராஜன் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் விழுந்தார். அதன் பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த நாகராஜனை உறவினர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நாகராஜன் பரிதாபமாக உயிரிழந்தார்.
அதையடுத்து கொலை குற்றவாளிகளை கைதுசெய்ய வலியுறுத்தி அஜந்தா தியேட்டர் அருகே உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் சமரசம் செய்ததால் மறியல் கைவிடப்பட்டது.
இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
என்.ஆர் காங்கிரஸ் பிரமுகர் வெட்டி கொலை!
சார்ந்த செய்திகள்
Next Story
'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை
100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.
அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
Next Story
லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்
நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.