Notification that night buses will not operate in Cuddalore

என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் மேல்வளையமாதேவி கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு கால்வாய் வெட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை 20க்கும் மேற்பட்ட ராட்சத மண் வெட்டும் வாகனங்கள் மூலம் அழித்துக் கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதற்கு அரசியல் கட்சியினர் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்தநிலையில் என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாவட்டத்தில் 13 அரசு பேருந்துகள் கல் வீசி தாக்கப்பட்ட நிலையில் இரவு நேரத்தில் கடலூரில் பேருந்துகள் இயங்காது என போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment