''எந்தநேரமும் வெளியாகலாம்''- டிடிவி.தினகரன் மீண்டும் சபதம்!  

அண்மைக்காலமாக செய்தியாளர்களை சந்திக்கும் அதிமுக அமைச்சர்கள் முதல் முதலமைச்சர் வரை அமமுக பற்றிய கேள்விக்கு அது ஒரு அங்கீகரிக்கப்படாத கட்சி என்றே விமர்சித்து வந்தனர்.

 '' Notification may be released at any time '' - TTV Dhinakaran vows again

இந்நிலையில் அமமுக கட்சியாக பதிவு பெற்றதாக எந்த நேரமும் செய்தி வெளியாகலாம் என அமமுக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,அதிமுகவை துரோகிகளிடம் இருந்து மீட்டெடுத்து புதிய ஆட்சி அமைத்திட சபதமேற்போம். உண்மையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் எண்ணம் பழனிச்சாமி அரசுக்கு அறவே இல்லை. மாநிலம் தழுவிய தேர்தலில் வெற்றி சாத்தியமில்லை என்ற முடிவுக்கு எடப்பாடி பழனிச்சாமி வந்துவிட்டதாக தெரிகிறது என்று கூறியுள்ளார்.

admk ammk
இதையும் படியுங்கள்
Subscribe