Skip to main content

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் வேலை நிறுத்தம்

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Notice of struggle of 108 ambulance drivers across Tamil Nadu

கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தமிழகம் தழுவிய வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்.

திருச்சியில் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர்  ஆர்.ராஜேந்திரன், “108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆர்.ராஜேந்திரன் திருச்சியில் அளித்த பேட்டியில், தமிழக முழுவதும் 1353, 108 ஆம்புலன்ஸ்கள் உள்ளது. சமீப காலத்தில் தமிழகத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் செவிலியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. எனவே இதனை மறைக்கும் நோக்கில் மேல் சிகிச்சை என்ற பெயரில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

ஆபத்து நேரத்தில் உதவுவதற்காக கொண்டு வரப்பட்ட 108 ஆம்புலன்ஸ் திட்டம்,  ஒரு மருத்துவமனையில் இருந்து அடுத்த மருத்துவமனைக்கு நோயாளிகளை கொண்டு செல்வதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. இதனால் விபத்து, பிரசவம், பாம்பு கடி உள்ளிட்ட ஆபத்து நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் உதவ முடியாத சூழல் ஏற்படுகிறது. தனியாரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபடும் ஓட்டுநர்களுக்கு பல்வேறு காலங்களில் விடுமுறைகள் அளிக்கப்படுவதால் போதிய ஓட்டுனர்கள் இன்றி வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

மேலும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பணிச்சுமைக்கு ஆளாக நேரிடுவதால் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே தமிழக அரசு கூடுதலாக ஆம்புலன்ஸ்களையும், தேவைக்கேற்ற ஓட்டுனர்களையும் பணியமர்த்த வேண்டும். இதுகுறித்து அரசுக்கு தொடர்ச்சியாக கோரிக்கைகளை வைத்து வருகிறோம். ஆனால் விபத்துகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களே காரணம் என பொய்ச்செய்தி பரப்பப்படுகிறது.  மேலும் தனியார் நிறுவனமும் எந்தவித சட்ட விதிமுறைகளையும் கடைபிடிப்பதில்லை.  தொழிலாளர்  நீதிமன்றங்களின் ஆணைகளை தொழிலாளர் ஆணையர்கள் அமுல் படுத்துவதில்லை. தொழிலாளர் நலனுக்கு விரோதமாக செயல்படும் தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக சுகாதாரத் துறை செயல்படுகிறது. இதனைக் கண்டித்து தமிழகம் தழுவிய போராட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஈடுபட உள்ளனர்” எனக் கூறினார்.

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 1353 ஆம்புலன்ஸ்கள் உள்ளது.  இதில் 900 ஆம்புலன்ஸ் மட்டுமே இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.