ADVERTISEMENT
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜா அறிவித்துள்ளார். இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை எந்தவிதமான பள்ளிகளும் திறக்க வேண்டாம். விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. எக்காரணம் கொண்டும் எந்த மாணவர்களையும் பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதீத கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் தூத்துக்குடியில் ஐந்தாவது நாளாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Show comments