ADVERTISEMENT
ADVERTISEMENT
குட்கா முறைகேடு ஆவணங்களை திட்டமிட்டு மறைத்து பதவி நியமனம் பெற்றதாக டிஜிபி ராஜேந்திரன் மீது புகார் எழுந்து. இது தொடர்பான வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்றது. இதுதொடர்பான அரசு ஆவணங்கள் போயஸ் கார்டனில் சசிகலா அறையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக டிஜிபி ராஜேந்திரன் நியமனத்திற்கு எதிரான இந்த வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதேபோல் முன்னாள் தலைமை செயலர் ராம் மோகன ராவ்,முன்னாள் டிஜிபி அசோக் குமார், சசிகலாவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வழக்கை ஜனவரி 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
ADVERTISEMENT
Show comments