Skip to main content

குரூப்-1 தேர்வில் மட்டுமல்ல… குரூப்- 2 தேர்விலும் குளறுபடி- வெடிக்கும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு சர்ச்சை!

Published on 13/06/2019 | Edited on 13/06/2019

துணைகலெக்டர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்- 1 தேர்வில் 24 கேள்விகள் தவறானவைதான் என்று நீதிமன்றத்தில் தமிழ்நாடு பொது தேர்வாணையாமான டி.என்.பி.எஸ்.சி. ஒப்புக்கொண்டது  தமிழகத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. இதுகுறித்து, நாம் விசாரித்தால் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் மட்டுமல்ல குரூப்-2 தேர்விலும் இதேமுறைகேடுகள் குளறுபடிகள் நடந்துள்ளன என்று குற்றஞ்சாட்டுகிறார்கள் தனியார் பயிற்சிமைய ஆசிரியர்களும் மாணவர்களும்.

 

TNPSC



துணை கலெக்டர்,  போலீஸ் டி.எஸ்.பி.,  ஊராட்சி  உதவி இயக்குனர், வணிகவரி  உதவி  கமிஷனர்,  மாவட்டப்  பதிவாளர்,  கூட்டுறவு சங்கங்களின்  துணைப் பதிவாளர்,  மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, கோட்ட தீயணைப்பு அதிகாரி ஆகிய  உயர்  பதவிகள்  குரூப்–1  முதல்நிலைத்தேர்வு  கடந்த 2019 மார்ச் மாதம் நடைபெற்றது. ஏப்ரல் மாதம் 3 ந்தேதி ரிசல்ட் வந்தபோது, 18 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டன என்று அப்போதே சர்ச்சை கிளம்பியது. ஆனாலும், தவறுகள் திருத்தப்பட்டதாகச்சொல்லிவிட்டு ஜூலை-12, 13 தேதிகளில் 9,000 மாணவர்களுக்கான முதன்மைத்தேர்வை (மெயின் தேர்வு) அறிவித்தார் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் சுதன்.

 



இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர் விக்னேஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி.யிடம் விளக்கம் கேட்டது நீதிமன்றம். ஆனால், மூன்றுமுறை விளக்கமளிக்காமல் வாய்தா வாங்கிக்கொண்டிருந்தது டி.என்.பி.எஸ்.சி. இதனால், மெயின் தேர்வை நிறுத்திவைத்து உத்தரவிட்டார் நீதிபதி. இதனால், கதறியடித்துக்கொண்டு ஓடிவந்த  டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள், 24 கேள்விகள் தவறானவை என்று ஒப்புக்கொண்டபோது அதிர்ச்சியடைந்து கண்டனம் தெரிவித்தார் நீதிபதி. காரணம், மாணவர் தரப்பில் 18 கேள்விகள் தவறானவை என்று வழக்கு தொடரப்பட்டது. ஆனால், கேட்கப்பட்ட 200 கேள்விகளில்  24 கேள்விகள் தவறானவை என்பதால் குரூப்-1 தேர்வில் இதுபோன்ற குளறுபடிகள் நடப்பதை அனுமதிக்கவே முடியாது என்று கண்டனம் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக ஜூன் – 17 ந்தேதி பதில்மனு தாக்கல் செய்யச்சொல்லி உத்தரவிட்டார் நீதிபதி.

 

TNPSC



இதுகுறித்து, நம்மிடம் பேசிய பிரபல நட்ராஜ் டி.என்.பி.எஸ்.சி. பயிற்சிமைய இயக்குனர் நட்ராஜ், “குரூப்-1 முதல்நிலைத் தேர்வில் மட்டுமல்ல.. குரூப்-2 முதல்நிலைத்தேர்விலும் இதேபோன்ற குளறுபடிகள் நடந்திருப்பதை அப்போதே சுட்டிக்காட்டினோம். அதாவது, குரூப்-2 தேர்வில் 11 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டிருக்கிறது.  ஆனால், டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. ஒரு கேள்வி தவறாக கேட்கப்பட்டால்  தேர்வு எழுதிய சுமார் 2,000 மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். தற்போது, 24 கேள்வி என்றால் கிட்டத்தட்ட 50,000 மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். நேர்மையாக படித்து தேர்வு எழுதிய 50,000 மாணவர்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிவிட்டது டி.என்.பி.எஸ்.சி.  இதைவிடக்கொடுமை, கடந்த வருடம் குரூப்-1 தேர்வின்மூலம் தேர்ச்சிபெற்ற 31 டி.எஸ்.பி.க்களில்  23 பேர்  டி.எஸ்.பிக்கள் பார்வை பரிசோதனையில் ஃபெயில் ஆகியிருக்கிறார்கள். பார்வை பிரச்சனை இருக்கிறதா? இல்லையா என்பது டி.என்.பி.எஸ்.சி.க்கு முன்கூட்டியே நேர்முகத்தேர்வின்போதே தெரியாதா? டி.எஸ்.பி.க்களுக்கு முக்கியத்தேர்வே உடல்தகுதிதான். அதிலேயே, ஃபெயில் என்றால் இவர்கள் நடத்தும் தேர்வு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை நாமே புரிந்துகொள்ளலாம்” என்று வேதனையோடு சுட்டிக்காட்டுகிறார்.

 

 



டி.என்.பி.எஸ்.சியில் குறிப்பாக குரூப்-1 தேர்வில் முறைகேடு நடந்தது குறித்து நக்கீரன் தொடர்ந்து அம்பலப்படுத்தியது. தற்போது, 24 வினாக்கள் தவறானவை என்று டி.என்.பி.எஸ்.சியே ஒப்புக்கொண்டது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எழுதிய மாணவர்கள்; ஆசிரியர்களின் செயலால் அதிரடி நடவடிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Action by teachers on Students wrote 'Jai Sri Ram' in the answer sheet

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் பகுதியில் வீர் பகதூர் சிங் புர்வன்சால் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பல்கலைக்கழத்தில் பி-பார்ம் பயின்ற முன்னாள் மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, அவர்கள் எழுதிய தேர்வில் அவர்களை தேர்ச்சி பெற வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தொடர்பான புகாரை, பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், முன்னாள் மாணவர்கள் முதலாமாண்டு தேர்வில் எழுதிய விடைத்தாள்களின் நகலை எடுத்து சரி பார்த்துள்ளார். அதில், ஜெய் ஸ்ரீ ராம் என்றும், ஜெய் ஹனுமான் என்றும், கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா என்ற வார்த்தைகளை மட்டும் எழுதி விடைத்தாள்களை நிரப்பியுள்ளனர். அந்த விடைத்தாள்களுக்கு 56% மதிப்பெண்களை ஆசிரியர்கள் மூலம் பெற்றுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், இந்த விடைத்தாள்களை முறைப்படி மீண்டும் திருத்த சொன்ன போது, அதில் அனைவருக்கும் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனையடுத்து, விடைத்தாள்களின் நகலையும், முறைப்படி திருத்தப்பட்ட விடைத்தாள்களையும் எடுத்து பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், இந்த முறைகேட்டில் 2 ஆசிரியர்களுக்கு சம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது. அதன் பேரில், மாணவர்களிடம் பணத்தைப் பெற்று கொண்டு அவர்களை தேர்ச்சி பெற வைத்த அந்த 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான், கிரிக்கெட் வீரர்கள் பெயரை மட்டுமே எழுதி வைத்த மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

டி.என்.பி.எஸ்.சி தேர்வர்கள் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Important announcement on Attention TNPSC Candidates

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதே போல், 90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறும். 29 பணியிடங்களுக்கான குரூப் 1-B மற்றும் குரூப் 1-C தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெறும். 

2,030 காலி பணி இடங்களுக்கான குரூப்-2, குரூப்- 2A தேர்வு வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும். அதே போல், டிப்ளமோ/ ஐடிஐ அளவில் 730 பணியிடங்களுக்கான தொழில்நுட்பப்பிரிவு தேர்வுகள் வரும் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பிற அரசு தேர்வுகளுக்கான தேதிகளையும் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. மேலும், டி.என்.பி.எஸ்.சி.யின் அனைத்து தேர்வுகளுக்கும் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது.