Skip to main content

நிறைந்தது குளம் மட்டுமல்ல மனமும்தான் -கைஃபா இளைஞர்களின் ஆனந்த விழா!

Published on 07/10/2019 | Edited on 07/10/2019

''நீரின்றி அமையாது உலகு'' அந்த நீரை பாதுகாக்க 20 வருடங்களுக்கு முன்புவரை விவசாயிகள் தாங்களே நீர்நிலைகளை சீரமைத்துக் கொண்டனர். அதன்பிறகு மழை பொய்த்ததால் சீரமைப்பும் குறைந்தது. அதன்பிறகு அரசு குளங்களை சீரமைப்பதை நினைக்கவே இல்லை. இந்தநிலையில்தான் விவசாயத்திற்கு மட்டுமின்றி குடி தண்ணீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டது.

இதன் பிறகும் நாம் பார்த்துக் கொண்டிருந்தால் இனியும் தண்ணீரின்றி தவிக்கும் நிலைவரும் என்பதை உணர்ந்த இளைஞர்கள் தாங்கள் சம்பாதித்து வந்த வேலைகளை உதறி தள்ளிவிட்டு தான் பிறந்து வளர்ந்த பூமியை வளமாக்க சொந்த கிராமங்களுக்கு வந்தனர்.

 

Not just the pool but the pleasure - the joyful celebration of the youth of Caifa!

 

தஞ்சை மாவட்டம் களத்தூர் கிராமத்தில் கடந்த ஆண்டு உருவாள உயிர்துளி அமைப்பின் மூலம் ரூ. 59 லட்சம் மதிப்பீட்டில் 18 கி.மீ வாய்க்கால்கள் உள்பட சீரமைக்கப்பட்ட இரு குளங்களால் தண்ணீர் நிறைந்து 300 அடியில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் 60 அடிக்கு உயர்ந்தது. இதைப் பார்த்த சுற்றுவட்டார 4 தாலுகா கடைமடை பாசன கிராம இளைஞர்கள், விவசாயிகள் இணைந்து கைஃபா என்ற அமைப்பை தொடங்கினார்கள்.

இந்த அமைப்பை தொடங்க வெளிநாடுகளில், வெளியூர்களில் லட்சம் லட்சமாக சம்பாதித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் சம்பளம் பெரிதில்லை என் சொந்த பூமியில் தண்ணீரை கொண்டு வந்து குளிர வைக்க வேண்டும் என்ற வேட்கை கொண்டு வந்தனர். பேராவூரணியில் 5500 ஏக்கர் பாசனத்திற்கு உள்ள 550 ஏக்கர் பரப்பளவில்  உள்ள பெரிய குளம், அதற்கு தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால்கள் பல வருடங்களாக புதர் மண்டி மண் சரிந்து கிடப்பதை பார்த்து முதலில் அந்தப் பணியை தொடங்கினார்கள். பெரிய பணி செய்து முடிக்க முடியுமா என்ற நினைவுகளோடு பூமி பூஜை போட்டு முடித்த அடுத்த நிமிடம் அவர்களிடம் ரூ. ஒரு லட்சத்தை பணம் கொடுத்தார் வெளிநாட்டில் வசிக்கும் அந்தப் பகுதி இளைஞர். அந்த பணம் கைஃபா குழுவினரை நம்பிக்கை ஏற்பட செய்தது. 

 

Not just the pool but the pleasure - the joyful celebration of the youth of Caifa!

 

அடுத்தடுத்து இளைஞர்களின் பணியை பார்த்து கொடையாளர்கள் நிதியை கொடுத்தனர். கிராம மக்கள் திருவிழாவுக்கு வசூலிப்பது போல வீட்டுக்கு வீடு வசூல் செய்து குளம் தூர்வார பணம் கொடுத்தனர். பள்ளி மாணவன் உண்டியல் சேமிப்பை கொடுத்தான். திருமண தம்பதி மாலையும் கழுத்துமாக வந்து நிதி வழங்கினார்கள். 8 மாத கர்ப்பணி உதவினார். இப்படி கஜா புயல் பாதிப்பு இருந்தாலும் தங்களால் இயன்ற உதவிகளை செய்தனர்.

இளைஞர்கள் இப்படி ஒரு பணியை செய்து வருகிறார்கள் என்பதை அறிந்து உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் நேரில் வந்து இளைஞர்களை பாராட்டி பொன்னாடை அணிவித்தார். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, கடலூர் மாவட்ட ஆட்சியர் வெற்றிச்செல்வன், சிவகுருபிரபாகரன் ஐ.ஏ.எஸ் என்று பலரும் வந்து பார்த்து பாராட்டியதுடன் அவர்களால் இயன்ற உதவிகளை செய்தனர்.

 

Not just the pool but the pleasure - the joyful celebration of the youth of Caifa!


கரையை பலப்படுத்தி மண் அறிப்பை தடுக்க வேண்டும் என்றபோது கடலூர் மாவட்ட ஆட்சியர் வெற்றிச் செல்வன் சொந்த செலவில் 25 ஆயிரம் வெட்டி வேர் நாற்றுகளை வழங்கினார். அந்த நாற்றுகளை மாணவர்களும் தன்னார்வலர்களும் நட்டனர். 10 ஆயிரம் பனை விதைகளை விதைத்தனர். கீரமங்கலம் நக்கீரர் தென்னை நிறுவனம் 10 ஆயிரம் பனை விதைகளை வழங்கியது. குளத்திற்கு தலா ஒரு ஏக்கர் பரப்பளவில் 3 இடங்களில் மண் மேடு அமைத்து மரம் தங்கச்சாமி நினைவு குருங்காடுகளையும் அமைத்தனர். பறவைகளுக்காக குருங்காடு என்றனர்.  

பணிகள் முடியும் போது கல்லணையில் தண்ணீர் வரத் தொடங்கியது. வந்த தண்ணீரை வீணாக்காமல் தூர்வாரிய குளத்திற்குள் பெருக்கிய போது தண்ணீரால் குளம் நிரம்பியது. குளம் நிரம்பியதால் இளைஞர்களின் மனம் குளிர்ந்தது. பல வருடங்களுக்கு பிறகு விவசாயிகள் முகத்தில் சந்தோசம் தெரிகிறது. அந்த சந்தோசத்தை காணத் தான் எங்கள் வேலைகளை ஒதுக்கி வைத்தோம். இதேபோல ஒவ்வொரு கிராமத்திலும் விவசாயிகளின் முகத்தில் சந்தோசத்தை காண போகிறோம் என்ற போது அவர்கள் முகங்களில் பூரிப்பு காணப்படுகிறது.

 

Not just the pool but the pleasure - the joyful celebration of the youth of Caifa!


இந்தநிலையில்தான் இப்படியான ஒரு பணியை முடிக்க தாராளமாக நிதி வழங்கிய கொடையாளர்களை கௌரவிக்கவும் மனம் நிறைந்த சந்தோசத்தை வெளிப்படுத்தவும் ஒரு ஆனந்த திருவிழா நடத்த வேண்டும் என்று முடிவெடுத்தனர்.அந்த நாள் அக்டோபர் 7.. பேராவூரணி தனியார் மண்டபத்தில் நடந்த ஆனந்த விழாவில் கொடையாளர்களை கௌரவிக்க நீதியரசர் சுரேஷ்குமார், கடலூர் மாவட்ட ஆட்சியர் வெற்றிச் செல்வன், உதவி ஆட்சியர் சிவகுருபிரபாகரன், நீயா நானா கோபிநாத் ஆகியோர் அழைக்கப்பட்டனர். கொடையாளர்கள் மட்டுமின்றி பல்வேறு கிராமங்களிலும் நீர்மேலாண்மைக்காக உழைத்து வரும் அமைப்புகள், தனி நபர்கள் என்று அனைவரையும் அழைத்து கௌரவப்படுத்தி உற்சாகமூட்டி மகிழ்ந்தனர்கள்.

 

hh

 

விழாவில் பேசிய நீதியரசர் சுரேஷ் குமார்.. நீர்மேலாண்மையில் சிறந்து விளங்கியவர்கள் நம் விவசாயிகள். அவர்களை புறந்தள்ளிவிட்டு எதையும் சாதிக்க முடியாது. இந்த இளைஞர்கள் நீர்மேலாண்மை விவசாயம் காக்க வெளிநாடுகளில் செய்த வேலைகளைக் கூட ஒதுக்கி வைத்துவிட்டு வந்து குளத்தில் வேலை செய்கிறார்கள் என்பதை கேள்விப்பட்டு நேரில் வந்து பாராட்டினேன். இப்போது கடும் பணிகளுக்கு இடையே அவர்களை கௌரவிக்க வேண்டும் என்பதால் வந்துவிட்டேன். புதுக்கோட்டை, ஆலங்குடியிலும் இன்று சங்கங்கள் சீரமைத்த பணிகளை பார்த்து பாராட்டினேன்.

 

Not just the pool but the pleasure - the joyful celebration of the youth of Caifa!

 

கைஃபா இளைஞர்களின் இந்த பணி மகிழ்ச்சி அளிக்கிறது. நீர்மேலாண்மை என்பது விவசாயத்திற்கு மட்டுமல்ல குடிநீருக்கும் முக்கியமானது. அதைதான் இவர்கள் செய்திருக்கிறார்கள். மேலும் பணி தொடரும் என்று சொல்லி இருக்கிறார்கள். தொடரட்டும் பணி. எங்களால் பொருளாதார உதவிகள் செய்ய முடியவில்லை என்றாலும் அவ்வப்போது வந்து அவர்களை தட்டிக் கொடுப்போம். இதேபோல கொத்தமங்கலம், சேந்தன்குடி உள்ளிட்ட கிராமங்களில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக குளம் சீரமைத்து மரக்கன்றுகளை நடுகிறார்கள் என்னும் போது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக வேன்! நண்பனின் ஆசையை நிறைவேற்றிய இளைஞர் மன்றம்!

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
 youth council bought a van for government school students who fulfilled their friend's wish

கீரமங்கலம் மேற்கு திருவள்ளுவர் இளைஞர் மன்றம் ஆண்டுக்கு ஒரு முறை விளையாட்டு விழா மட்டும் நடத்திவிட்டு ஓய்ந்துவிடாமல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று முனைப்புடன் அப்பகுதி பள்ளிகளுக்கு ஏராளமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததுடன் சில ஆசிரியர்களை நியமித்து சம்பளமும் வழங்கி வருகின்றனர்.

இந்த இளைஞர் மன்றத்தில் உள்ள சிற்றரசு என்ற இளைஞர் அரசுப் பள்ளிக்கு கூடுதல் வசதியாக தன் சொந்தச் செலவில் வேன் வாங்கி மாணவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டு வேனும் வாங்கினார். வேன் வாங்கி கொஞ்ச நாட்களிலேயே துரதிஷ்டவசமாக சிற்றரசு ஒரு விபத்தில் உயிரிழந்தார். அந்த வேன் சில வருடங்களாக அவரது வீட்டிலேயே நின்றது.

 youth council bought a van for government school students who fulfilled their friend's wish

இந்த நிலையில்தான் நண்பன் சிற்றரசின் அரசுப் பள்ளி ஆசையை நிறைவேற்ற நினைத்த இளைஞர் மன்ற நண்பர்கள் சிற்றரசின் குடும்பத்தினர் அனுமதியுடன் அந்த வேனை எடுத்து வந்து பழுது நீக்கி சிற்றரசு நினைவு பள்ளி வாகனம் என்று இயக்கத் தொடங்கியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மேற்கு திருவள்ளுவர் மன்றம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் 67 மாணவர்களையும் அவர்களின் வீடுகளில் காலையில் ஏற்றி மாலையில் கொண்டு போய்விட ஆலோசித்தனர். பலர் பெட்ரோல் செலவுகளை ஏற்றுக் கொண்டனர். இளைஞர் மன்றத்தில் உள்ள ஓட்டுநர்கள் வேன் ஓட்டத் தயாரானார்கள்.

வெள்ளிக்கிழமை மாலை அரசுப் பள்ளிக்கான வேன் இயக்கும் தொடக்க விழா பள்ளி தலைமை ஆசிரியர் துரைப்பாண்டியன் தலைமையில் இளைஞர் மன்றத்தினர், பெற்றோர் ஆசிரியர் கழகம், எஸ்எம்சி நிர்வாகிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள் முன்னிலையில் பேரூராட்சித் தலைவர் சிவக்குமார் வேன் வசதியை தொடங்கி வைத்தார். மாணவர்களுடன் வேன் செல்லும் போது பெற்றோர்களும் மாணவர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் ஏறிச் சென்றனர். 

 youth council bought a van for government school students who fulfilled their friend's wish

இது குறித்து இளைஞர்கள் கூறும் போது, “அரசுப் பள்ளியை வளமாக்க வேண்டும், அதனால் தனியார் பள்ளியைவிட தரம் உயர்த்த வேண்டும் என்று பள்ளியின் தேவையறிந்து செய்து வருகிறோம். அந்த வகையில் சிற்றறரசு வாங்கிய வேனை அவரது நினைவாக பள்ளிக்கு இயக்குகிறோம். இளைஞர் மன்றத்தினரே ஓட்டுநர்களாக உள்ளனர். இளைஞர் மன்றம் மூலமே பெட்ரோல் செலவுகளும் செய்து கொள்கிறோம். தொடர்ச்சியாக இந்த வேன் இயக்கப்படும் போது கூடுதல் மாணவர்கள் சேர்க்கை இருக்கும் என்று நம்புகிறோம்” என்றனர்.