Skip to main content

ஒருவர் கூட சேராத 72 பொறியியல் கல்லூரிகள்.... அதிர்ச்சிதரும் கலந்தாய்வு முடிவுகள்...

Published on 09/10/2021 | Edited on 09/10/2021

 

Not even one of the 72 colleges joined ..! Status of Engineering Colleges!

 

தமிழ்நாட்டில் 461 பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 63,154 இடங்களை நிரப்புவதற்கான இணைய வழி கலந்தாய்வு, கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. நேற்று வரை இறுதி கட்ட கலந்தாய்வு நடைபெற்றது.

 

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 72 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவலுடன், 131 கல்லூரிகளில் 1 சதவீதத்திற்கும் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெற்றதும் தெரிய வந்துள்ளது. அதேபோல் பொது கலந்தாய்வில் பங்கேற்காதவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தைவிட 12 சதவீதம் அதிகரித்துள்ளது. 12 அரசு பொறியியல் கல்லூரிகள், ஒரு அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரி மற்றும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மட்டுமே 100 சதவீதம் இடங்கள் நிரம்பியுள்ளன. இதில், கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா பொறியியல் கல்லூரி, குரோம்பேட்டை மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்டவை அடங்கும்.

 

தமிழகத்தில் 20 பொறியியல் கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வருடம் 16 பொறியியல் கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை. பொதுக் கலந்தாய்விற்கு பிறகும் 461 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 56.4 சதவீதம் இடங்கள் காலியாகவே உள்ளன.

 

பொது கலந்தாய்வில் கலந்து கொள்ள 1,10,836 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், நான்கு கட்டங்களாக நடத்தப்பட்ட கலந்தாய்வில் 69,752 இடங்களுக்கு மட்டுமே மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ராணுவம், விளையாட்டு உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளில் 1,443 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக உள்ள 1,63,154 இடங்களில் 71,195 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. அதாவது, 43.6 சதவீதம் இடங்கள் மட்டும் நிரம்பியுள்ளன. மீதமுள்ள 56.4 சதவீதம் அதாவது 91,959 இடங்கள் காலியாக உள்ளன. கடந்த ஆண்டு 48.2 சதவீதம் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரம்பியிருந்தன. இந்தாண்டு 4.6 சதவீதம் குறைந்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பற்றி எரிந்த கல்லூரி; பதறியடித்து வெளியேறிய மாணவர்கள்

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

Burnt about college; The panicked students left

 

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் ஜான்சன் டெக்னாலஜி என்ற தனியார் கல்லூரி ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

 

இன்று காலை முதலே கல்லூரியில் வகுப்புகள் வழக்கம்போல் நடந்து வந்த நிலையில், மாலையில் திடீரென கல்லூரியின் ஆடிட்டோரியம் பகுதியில் இருந்து அதிகப்படியான புகை வெளியானது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீ எரிந்து வரும் நிலையில், சூலூர், பல்லடம் ஆகிய பகுதிகளில் இருந்து  சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் கல்லூரி கட்டிடங்களுக்குள் இருந்து வெளியேறிய மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் பாதுகாப்பிற்காக தஞ்சமடைந்துள்ளனர். உள்ளே யாரேனும் சிக்கி உள்ளார்களா என்பது தொடர்பாக தீயணைப்புத்துறை வீரர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

கல்லூரியின் ஆடிட்டோரியம் பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அங்கே வைக்கப்பட்டிருந்த ரெசின் மற்றும் ஸ்பாஞ்ச் கொண்ட இருக்கைகள் வழியாக தீ அனைத்து இடத்திற்கு பரவியது தெரிய வந்தது. சுமார் 7 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஆடிட்டோரியம் பகுதியில் மாணவர்கள் ஆசிரியர்கள் யாரும் அதிகம் செல்லாத நிலையில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

Next Story

ஹால் டிக்கெட் வழங்காத கல்லூரி நிர்வாகம்; போராட்டத்தில் குதித்த மாணவர்கள் 

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

Students are struggle against the college administration for not issuing hall tickets

 

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பிராட்டியூரில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 1500க்கு மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் கல்வி பயின்று வருகின்றனர். செமஸ்டர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதலாண்டு மாணவர்கள் முதல் இறுதியாண்டு மாணவர்கள் வரை செமஸ்டர் தேர்வு எழுதி வருகின்றனர்.

 

இந்த நிலையில் தேர்வு கட்டணம், விடுதி கட்டணம், ஆண்டு கல்விக் கட்டணத்தை கட்டாத மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் தர மறுத்ததால் பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் தாங்கள் பயிலும்  கல்லூரி வாசல் முன்பாக திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் செமஸ்டர் தேர்வு எழுத அனுமதி மறுக்கும் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து முழக்கம் எழுப்பினர். மாணவர்களின் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை உதவி ஆணையர் கென்னடி தலைமையிலான போலீசார் மாணவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவர்களின் போராட்டத்தால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மாணவர்களின் போராட்டம் ஒருபுறம் இருந்தாலும் கல்லூரியின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது எனக் குற்றம் சாட்டப்படுகிறது.

 

கல்லூரியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்றும், குறைந்த அளவிலான ஆசிரியர்களே இருப்பதாகவும் அங்கு இருக்கிறவர்கள் தெரிவித்தனர். மேலும் வாசலில் சாக்கடைக்காக தோண்டிய பள்ளம் மூடப்படாமலேயே நீண்ட நாட்களாக இருப்பதாகவும் இதனால் மாணவர்கள் கல்லூரிக்கு உள்ளே செல்ல தினமும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இது குறித்து மாணவர்கள் கூறுகையில், தேர்வு கட்டணம் செலுத்தியும் எங்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கவில்லை என்றும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கல்லூரி நிர்வாகத்தில் இருந்து பணம் செலுத்தாத காரணத்தினால் ஹால் டிக்கெட் வரவில்லை என்று மாணவர்கள் குற்றம்சாட்டினர். நாங்கள் எழுதும் தேர்வு வால்யூவேஷனுக்கு செல்லுமா என்பதே சந்தேகமாக உள்ளது. ஒவ்வொரு தேர்வுக்கு முன்பாகவும் மாணவர்களிடம், தேர்வு எழுதுகிறோம் என்று ஒப்புதல் கடிதம் எழுதி கையெழுத்து பெற்ற பின்னரே தேர்வுக்கு அனுமதிக்கின்றனர் என்றனர்.