Skip to main content

அழகாய் இல்லை... கணவன் டார்ச்சரால் மனைவி தற்கொலை!

Published on 29/01/2020 | Edited on 29/01/2020

 

         தாயை சின்ன வயதில் இழந்த நாகா்கோவில் காற்றாடித்தட்டையை சோ்ந்த அா்சனா (24) அதே பகுதியை சோ்ந்த சிவனை பல கனவுகளோடு கரம் பிடித்தார். திருமணமாகி 7 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் நேற்று (28-ம் தேதி) இரவு தீகுளித்து தற்கொலை செய்து கொண்டார். அா்சனாவின் மரணம் அந்த பகுதியை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம் தாயை இழந்த அவர் அந்த பகுதியில் வயதுக்கு மூத்த பெண்களை அம்மா என்றே அழைத்து வந்தார். மேலும் அந்த பகுதியில் உள்ள எல்லாரிடத்திலும் அன்பாக பழகி வந்தார்.

 

kanyakumari



இந்த நிலையில் மகளை பறிகொடுத்த தந்தை பொன்னு முத்து கூறும்போது, மூன்று பெண் குழந்தைகளில் மூன்றாவது தான் அா்சனா. தாய் இல்லாத குறையை காட்டாமல் தாயாகவும் தந்தையாகவும் மூன்று பேரையும் வளா்த்தேன். மகளை விருப்பபட்டு பெற்றோர்களின் சம்மதத்துடன் தான் சிவன் திருமணம் செய்தான். இரண்டு மாதம் சந்தோஷமாக இருந்த அவா்கள் அதன்பிறகு கணவனுக்கும் மாமியாருக்கும் தன்னை பிடிக்கவில்லையென்றும் நான் ஒல்லியாக அழகு இல்லாமல் இருக்கிறேன் என குற்றம் சொல்லி தினமும் கணவா் சண்டை போடுவதாக என்னிடம் சொல்லுவாள். 



இதனால் மகள் குண்டாக அக்கம் பக்கத்தினா் சொல்வதையெல்லாம் கேட்டு அதை வாங்கி சாப்பிட்டு வந்தாள். அதன் பிறகு சுவையாக சமையல் செய்யவில்லை என்று அதையும் குற்றம்சொல்லி அவளை அடிக்கடி அடிப்பதால் தினமும் நிம்மதி இல்லாமல் மனவேதனையில் இருந்து வந்தாள். இந்தநிலையில் தான் அவள் தற்கொலை செய்து இருக்கிறாள். அது கொலையாக கூட இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. இதனால் என் மகளின் மரணத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும் அதற்கு காரணமானவா்களுக்கு உடனடி தண்டனையும் கொடுக்க வேண்டும் என்றார்.



கணவா் சிவன் கூறும்போது, வழக்கம் போல் நான் காலையில் வேலைக்கு சென்று விட்டேன். நான் வேலை முடிந்து வீட்டிற்கு வர நேரமானது. அந்த நிலையில் தான் அவள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் எனக்கு தெரியவந்தது என்று கூறியுள்ளார்.


திருமணமான 7 மாதத்தில் அா்ச்சனா தற்கொலை செய்து கொண்டதால் நாகா்கோவில் கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டு வருகிறார். 
                                             

சார்ந்த செய்திகள்

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'நல்லா சாப்பிடுங்க' -உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர்

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
  the candidate who gathered votes by feeding them food

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் நூதனமான முறையில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. டீக்கடையில் டீ ஆற்றுவது, பரோட்டா சுடுவது, துணித் துவைப்பது போன்ற நூதன முறைகளில் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற வேட்பாளர் ஒருவர் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த நிகழ்வு நடந்துள்ளது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியின் விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளரான ராணி, உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவு பரிமாறியதோடு உணவை ஊட்டி விட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளரின் இந்த நடவடிக்கை, அந்தப் பகுதி வாக்களர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.