Skip to main content

ரயிலில் கஞ்சா கடத்திய வடமாநில இளைஞர் கைது

Published on 29/09/2022 | Edited on 29/09/2022

 

Northern youth arrested for smuggling cannabis in the train!

 

 

மேற்குவங்க மாநிலம், கல்கத்தாவில் இருந்து ஹௌரா எக்ஸ்பிரஸ் சென்னை வழியாக புதுச்சேரிக்கு செல்லும். இந்த ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவ்வப்போது ஆய்வு செய்வார்கள். அதன்படி நேற்று காலை ஹௌரா எக்ஸ்பிரஸ், விழுப்புரம் ஜங்ஷன் அருகே வந்தபோது ரயில்வே பாதுகாப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் ரயிலில் சோதனை செய்தனர். 

 

அப்போது ரயில் என்ஜினுக்கு அடுத்த பெட்டியில் ஒரு வாலிபரின் உடமைகளை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அவரிடம் ஒரு கிலோ எடைக்கொண்ட கஞ்சா இரண்டு பொட்டலங்களாக இருந்ததை கண்டுபிடித்தனர். மேலும், ஒரு லிட்டர் பாட்டிலில் கஞ்சாவை ஆயிலாகதயாரித்து கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்ட போதை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்திவந்த வாலிபரை பிடித்து விழுப்புரம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

 

போலீசாரின் விசாரணையில் அவர் ஒடிசா மாநிலம் மயூர் பாஞ்சி பகுதியைச் சேர்ந்த சிசீரா குமார் கிரி(32) என்பதும், இவர் புதுச்சேரி மற்றும் கர்நாடக மாநிலங்களைச் தேர்ந்த சில நபர்களுக்கு ஒடிசாவில் இருந்து கஞ்சா பொட்டலங்களையும், கஞ்சா மூலம் தயாரிக்கப்பட்ட ஆயிலையும் விற்பனைக்கு கடத்தி வந்து தெரியவந்தது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.