Skip to main content

வட மாநிலத்திற்குச் சுற்றுலா சென்ற தமிழர்கள் தவிப்பு!

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

 


மதுரை மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த 45 பேர் கடந்த 9ம் தேதி மதுரை பத்மா டூரிஸ்ட் மூலம் கல்கத்தா, காசி, அயோத்தி, அகமதாபாத், பஞ்சாபில் உள்ள பொற்கோவில் என  பல்வேறு இடங்களைப் பார்த்து விட்டு மீண்டும் 24 ஆம் தேதி டெல்லியில் இருந்து மதுரை வரை இருந்தனர். 
 

ஆனால் திடீரென அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டதால் வட மாநிலத்துக்குச் சுற்றுலா சென்ற மதுரை திண்டுக்கல்லைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பஞ்சாபிலுள்ள பொற்கோயில் வெளியே தங்க இடம் இல்லாமலும் சாப்பாட்டுக்கு வழியின்றி தவித்து வருகிறார்கள்.

dindugal Tourists Northern



இதனால் பாதிக்கப்பட்ட திண்டுக்கல்லை சேர்ந்த மோகன் நம்மைத் தொடர்பு கொண்டு பேசியபோது, சுற்றுலா வந்தவர்களில் 45 பேரில் 26 பேர் பெண்கள். மீதி 19 பேர் ஆண்கள். அனைவருமே 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். அதனால் தங்குவதற்கு சாப்பாடு வசதிக்கு இடம் இல்லாமல் தவித்து வருகிறோம். இது சம்பந்தமாக மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எங்களை எப்படியும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

 

dindugal Tourists Northern State


 

அதுபோல் நானும் வனத்துறை அமைச்சர் சீனிவாசனைத் தொடர்பு கொண்டு எங்களைக் காப்பாற்றுங்கள் என்று வலியுறுத்தி இருக்கிறோம். இருந்தாலும் நக்கீரன் மூலமாவது நாங்கள் சொந்த ஊருக்கு வர வேண்டுமென்று வலியுறுத்தி உங்களுக்குத் தகவல் சொல்லுகிறோம். அதன் அடிப்படையில்  நீங்களும் உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பஞ்சாபில் இருந்து எங்களைத் திண்டுக்கல் மதுரைக்கு வருவதற்கு வழி செய்ய வேண்டும் என்று வருத்தத்துடன் கூறினார். அதைத் தொடர்ந்து நாமும் வனத்துறை அமைச்சர் சீனிவாசனையும் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியையும் தொடர்புகொண்டு வடமாநிலத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் 1749 வேட்பு மனுக்கள் தாக்கல்! 

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
1749 nominations filed in Tamil Nadu
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு (கோப்புப்படம்)

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. மேலும் தமிழகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசி (27.03.2024) நாள் ஆகும்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 1403 பேர் தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர் என்ற விவரம் வெளியாகியுள்ளது. இதற்கான தகவலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (28.03.2024) நடைபெற உள்ளது. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

அதாவது திருவள்ளூர் - 31, வட சென்னை - 67, தென் சென்னை - 64, மத்திய சென்னை - 58, ஸ்ரீபெரும்புதூர் - 53, காஞ்சிபுரம் - 31, அரக்கோணம் - 44, வேலூர் - 50, கிருஷ்ணகிரி - 41, தருமபுரி - 44, திருவண்ணாமலை - 49, ஆரணி - 48, விழுப்புரம் - 31, கள்ளக்குறிச்சி - 37, சேலம் - 52, நாமக்கல் - 58, ஈரோடு - 52, திருப்பூர் - 46, நீலகிரி - 33, கோயம்புத்தூர் - 59, பொள்ளாச்சி - 44, திண்டுக்கல் - 35, கரூர் - 73, திருச்சிராப்பள்ளி - 48, பெரம்பலூர் - 56, கடலூர் - 30, சிதம்பரம் - 27, மயிலாடுதுறை - 30, நாகப்பட்டினம் - 26, தஞ்சாவூர் -  36, சிவகங்கை - 39, மதுரை - 41, விருதுநகர் - 41, ராமநாதபுரம் -  56, தூத்துக்குடி - 53, தென்காசி - 37, திருநெல்வேலி - 53, கன்னியாகுமரி - 33 என மொத்தம் 1749 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. 

Next Story

“தேர்தலுக்கு பிறகு 100 நாள் வேலைக்கு ரூபாய் 400 ஊதியம் கிடைக்க வழி செய்யப்படும்” - அமைச்சர் ஐ.பெரியசாமி

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
 After election, a way will be made to get Rs 400 wages for 100 days of work says Minister I. Periyasamy

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி கட்சியில் உள்ள சிபிஎம் கட்சியின் வேட்பாளரான சச்சிதானந்தத்தை ஆதரித்து ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆத்தூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் தீவிரமாக சுற்றுப்பயணம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆத்தூர் கிழக்கு ஒன்றிய  செயலாளர் பிள்ளையார்நத்தம் முருகேசன் தலைமை தாங்கினார். ஊராட்சிமன்ற தலைவர் உலகநாதன் வரவேற்றார். ஒன்றியபெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன், மாவட்டகவுன்சிலர் பத்மாவதி ராஜகணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிள்ளையார் நத்தத்திற்கு வாக்குகள் சேகரிக்க வந்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கும், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கும் கிராம மக்கள்பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்

 After election, a way will be made to get Rs 400 wages for 100 days of work says Minister I. Periyasamy

அதன்பின்னர் வாக்காள மக்கள் மத்தியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, கிராமங்களில் வறுமையை ஒழித்தது நூறு நாள்வேலை திட்டம் தான். நூறுநாள் வேலை திட்டம் மூலம் வறுமையை மட்டுமின்றி வேலையில்லா திண்டாட்டமும் ஒழிந்தது. மத்தியில் ஆளும் பாஜக அரசு மீண்டும் வந்தால் நூறுநாள் வேலை திட்டத்தை முற்றிலும் ஒழித்துவிடும். அதன் பின்னர் எங்கு பார்த்தாலும் பசியும் பட்டினியும்தான் இருக்கும். இந்த நிலைமை வராமல் இருக்க வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் சிபிஎம் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்  சச்சிதானந்தத்திற்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களித்து அவரை  அமோக வெற்றியை பெறச் செய்ய வேண்டும்.

கடந்த வருடம் நான் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த போது ஆத்தூர் தொகுதியைச் சேர்ந்த 110பேருக்கு ஒரு பைசா செலவில்லாமல் கூட்டுறவுத்துறையில் ரேசன்கடை பணியாளர்களாக பணியமர்த்தினேன். இதுபோல ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள கூட்டுறவு மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் அனைவருக்கும் கல்விக்கட்டணம் வழங்கியதோடு தேர்வு கட்டணமும் வழங்கியதால் ஆத்தூர் தொகுதியில் உள்ள கிராமப்புற ஏழைகளின் சிரமங்கள் குறைந்தது. தேர்தலுக்கு பிறகு நூறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பயனாளிகள் அனைவருக்கும் ரூ.400 ஊதியமாக கிடைக்க வழி செய்யப்படும் என்று கூறினார்.

 After election, a way will be made to get Rs 400 wages for 100 days of work says Minister I. Periyasamy

அதனை தொடர்ந்து செட்டியாபட்டி, காந்திகிராமம் ஊராட்சிக்கு சென்று தேர்தல் பிரச்சாரம் செய்த பின்பு தொப்பம்பட்டி ஊராட்சிக்கு வந்த போது தொப்பம்பட்டியில் உள்ள ஆதிதிராவிடர் காலனி மற்றும் அருந்ததியர் காலனியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் ஆரத்தி எடுத்து அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களையும் வேட்பாளர் சச்சிதானந்தம் அவர்களையும் வரவேற்றனர். அவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “இங்குள்ள மக்கள் தங்களுக்கு வீடு வசதி வேண்டுமேன கோரிக்கை விடுத்துள்ளனர். நான் ஒன்றை மட்டும் அவர்களுக்கு சொல்கிறேன். தேர்தல் முடிந்தபின்பு முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தாள் அன்று தொடங்கப்பட உள்ள கலைஞரின் கணவு இல்ல திட்ட மூலம் அவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். இதற்காக தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின்  ரூ.35ஆயிரம் கோடியை நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். வருடத்திற்கு ஒருலட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.

கடந்த10 வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியின் போது திண்டுக்கல் மாவட்டம் 100 நாள் வேலை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக விருது வாங்கியது. தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசு நூறு நாள் திட்டத்தை முடக்கும் வண்ணம் 1 லட்சம் கோடிநிதி வழங்குவதற்கு பதிலாக 60 ஆயிரம் கோடியை மட்டும் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் நூறுநாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு கூலியாக வழங்கியுள்ளது. பாக்கியுள்ள 40 ஆயிரம் கோடியை வழங்கினால்தான் நூறு நாள் வேலை திட்டபயனாளிகளுக்கு முழுமையான கூலி வழங்க முடியும். இதை மத்தியில் ஆளும் பாஜகஅரசு வழங்க மறுப்பதோடு நூறுநாள் வேலை திட்டத்தையும் முடக்க நினைக்கிறது. உங்களுக்கு நூறு நாள் வேலை திட்டம் முழுமையாக கிடைக்க வேண்டுமென்றால் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களித்தால் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். நூறு நாள் வேலை திட்டமும் தொடர்ந்து கிடைக்கும்” என்றார்.

 After election, a way will be made to get Rs 400 wages for 100 days of work says Minister I. Periyasamy

பஞ்சம்பட்டி பாஸ்கா மைதானம் முன்பு பிரச்சாரம் செய்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அப்பகுதியில் உள்ள டீ கடைக்கு வேட்பாளருடன் சென்று டீ குடித்ததோடு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.