Skip to main content

தொடர் கைவரிசை; வசமாக சிக்கிய வடமாநில கும்பல்

Published on 27/05/2022 | Edited on 27/05/2022

 

Northern robbers who stole from  tamilnadu many places

 

அரியலூர் ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலை டவுன்ஷிப் வளாக குடியிருப்பு பகுதியில் கடந்த 17 ஆம் தேதி நள்ளிரவு ஒரு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள் 80 பவுன் நகைகளை திருடிச் சென்றது சம்பந்தமாக அரியலூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 142/2022 u/s 457, 380 IPC வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

இந்த திருட்டு தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தும், சைபர் கிரைம் தொழில்நுட்ப உதவியுடன் ஆய்வு செய்ததில் இச்சம்பவத்தில், மத்திய பிரதேச மாநிலத்தில் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன், திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சரவணன் சுந்தர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான், அப்துல்லா ஆகியோரின் உத்தரவின் பேரில் மத்திய பிரதேசம் மாநிலத்திற்கு ஆய்வாளர்கள் சகாய அன்பரசு, அன்பழகன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் பாலாஜி, நந்தகுமார் மற்றும் போலீசார் விசாரணை செய்ததில் தார் மாவட்டத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் மேற்படி தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு இருப்பதும், அவர்கள் மீண்டும் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவதற்காக தமிழ்நாட்டில் மீண்டும் வந்திருப்பது தெரியவந்தது. 

 

இதனால் அரியலூர் மாவட்டத்தில் சிமெண்ட் தொழிற்சாலை பகுதியில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் நேற்று (26.5.2022) காலை 11 மணியளவில் தனிப்படை போலீசார் மத்திய பிரதேசத்தை சேர்ந்த நான்காபெளரியா, காளியா, அமீர்,  சர்தார்ஹீரு ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர்.  மேலும் அவர்களிடமிருந்து அரியலூர் ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலை குடியிருப்பு பகுதியில் சுமார் 80 சவரன் தங்க நகைகளை வீட்டை உடைத்து இரும்பு பயன்படுத்திய ராடுகள் திருடுவதற்கு கட்டிங் பிளையர் உள்ளிட்டவைகளை கைப்பற்றினர். அத்துடன் கடந்த 12ஆம் தேதி தூத்துக்குடி அனல்மின் ஊழியர் குடியிருப்பில் வீடுகளை உடைத்து திருடிய சுமார் மேலும் 350 கிராம் எடையுடைய வெள்ளிப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.  

 

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில்  மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி மத்திய பிரதேசம், புனே, போபால் குஜராத், கர்நாடக மற்றும் ஆந்திர உள்ளிட்ட பல மாநிலங்களில் பல இடங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.  மேலும் கைது செய்யப்பட்ட 4 பேரையும் இன்று (26.5.2022) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்பு போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துணை ராணுவப்படையினரின் வாகனம் விபத்து; கால் துண்டான நிலையில் வீரர்களுக்கு சிகிச்சை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Accident involving paramilitary personnel on the national highway

ஆவடி துணை ராணுவப் பயிற்சி மையத்தை சேர்ந்த 71 துணை ராணுவ வீரர்கள் (சி.ஆர்.பி.எப்) கர்நாடக மாநிலம்  ஷிமோகாவில்  பயிற்சி முடித்து விட்டு மீண்டும் நேற்று 5  இராணுவ வாகனத்தில் ஆவடி பயிற்சி மையத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம்  பகுதியில் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் துணை இராணுவ வீரர்கள் ஓட்டி வந்த வாகனம், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 சி.ஆர்.பி.எப் வீரர்கள் படுகாயமடைந்தனர். மேலும் வாகனத்தை ஓட்டிச்சென்ற ரிஜோ மற்றும் சின்னதுரையின் கால் வாகனத்தின் இடிபாடுகளில் சிக்கி துண்டானது.

Accident involving paramilitary personnel on the national highway

அதனை தொடர்ந்து நீண்ட நேர போரட்டத்திற்கு பிறகு இருவரையும் லாரியின் இடிபாடுகளிலிருந்து சக வீரர்கள் மற்றும் பொதுமக்கள்  மீட்டு அவர்களை சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு தலைமை காவலர் ராமசந்திரன் மற்றும் காவலர் வல்லவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து காரணமாக பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

திருச்சியில் 4 இடங்களில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Rs 9 lakh confiscated at 4 places in Trichy

தமிழகத்தில் அடுத்த மாதம் 19-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க திருச்சி மாவட்டத்தில் 81 பறக்கும் படைகள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர நிலையான கண்காணிப்பு குழுவும் 14 சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11.45 மணியளவில் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பெரமங்கலம் பஸ் நிறுத்தத்தில் பறக்கும் படை அதிகாரி வினோத் குமார் தலைமையிலான குழுவினர் நடத்திய சோதனையில் ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் சிக்கியது. கீரிப்பட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்த தொகையை எடுத்து சென்றுள்ளார். அதைத்தொடர்ந்து கைப்பற்றப்பட்ட ரூ. 3 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் மணச்சநல்லூர் தாசில்தாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதேபோன்று மன்னார்புரம் பஸ் நிறுத்தத்தில் ஒருவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் பணமானது பறக்கும் படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு திருச்சி மேற்கு தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் கத்தரிக்காய் சாலையில் பிரபு தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுக்கோட்டை திருமயம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவர் லால்குடியில் இருந்து குமுலூர் நோக்கி தனது காரில் 50 ஆயிரத்து 500 பணத்தினை உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற போது பிடித்தனர். அதனைத் தொடர்ந்து லால்குடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்டிஓ சிவசுப்பிரமணியன் தாசில்தார் முருகன், தேர்தல் துணை வட்டாட்சியர் கார்த்திகேயன் ஆகியோரிடம் பறக்கும் படைத்தலைவர் பிரபு ஒப்படைத்தார்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் வெங்கங்குடி பேருந்து நிறுத்தம் அருகே, காரில் சாக்லேட் மற்றும் குளிர்பானங்கள் மொத்த விற்பனை செய்யும், மண்ணச்சநல்லூர் ராஜாஜி நகரை சேர்ந்த மூக்கன் (வயது 48) என்பவரிடமிருந்து 4,50,000 ரூபாய் ஆவணங்கள் இல்லாத ரொக்கப் பணத்தை பறக்கும் படை அதிகாரி சித்ராதேவி தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்தனர்.