Skip to main content

கொட்டித் தீர்க்கும் வடகிழக்கு பருவமழை; இயல்பு வாழ்க்கையை இழந்து முடங்கிக் கிடக்கும் டெல்டா!

Published on 01/12/2019 | Edited on 01/12/2019

தொடர்ந்து கொட்டித் தீர்க்கும் கனமழையால் டெல்டா மாவட்டங்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக சிதைந்து காணப்படுகிறது. வீடுகளும், விளைநிலங்ளில் உள்ள பயிர்களும் தண்ணீரில் மிதக்கின்றன. மக்கள் வீடுகளிலேயே முடங்கியநிலையிலேயே பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

 

Northeast monsoon season; Delta, which has lost its normal life, is paralyzed!

 

வடகிழக்கு பருபவமழை வழக்கத்தைவிட கடந்த நான்கு நாட்களில் சற்று அதிகமாகவே கொட்டித்தீர்த்துள்ளது. தூர்வாரும் பணியில் அலட்சியம் காட்டியதன் விளைவு பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கிகிடக்கின்றனர். வடிகால் வசதிகள் இல்லாமல் தெருக்களில் தண்ணீர் சூழ்ந்து ஏரியாக காணப்படுகின்றன. பெரும்பாலான குடிசைகள் இடிந்து விழுகிறது. 

 

Northeast monsoon season; Delta, which has lost its normal life, is paralyzed!


தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் மெலட்டூர் மூன்றாம் சேத்தியில் ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் துரைக்கண்ணு என்பவர் இறந்துள்ளார். அதேபால் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பரவாக்கோட்டையில் கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ரவிச்சந்திரன் என்பவர் உயிரிழந்திருக்கிறார். தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் பெரும்பாலான கிராமங்கள் தண்ணீரில் சூழ்ந்துகாணப்படுகிறது. கூரை வீடுகளும், ஓட்டு வீடுகளும் இடிந்துவருகின்றன.

 

Northeast monsoon season; Delta, which has lost its normal life, is paralyzed!


ஒவ்வொரு ஆண்டும் மழைகாலம் வந்தாலே முதலில் பாதிக்கும் இடமாக வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சிக்கு உட்பட்ட விளக்குமுகம் தெரு முழுகிவிடும் அதற்கு காரணம் வடிகால் வாயக்கால்கள் முழுவதும் தனியார் விடுதிகளால் ஆக்கிரிமிக்கப்பட்டதுதான் என கூறிதொடர்ந்து அந்த பகுதிமக்கள் போராடிவருகின்றனர். அரசின் அலட்சியம் இந்த மழையிலும் அவர்கள் தப்பவில்லை.

அங்குள்ள பொதுமக்கள் கூறுகையில், "ஒவ்வொரு வருடமும் மழைகாலம் வத்துவிட்டாலே உசுரு கையில இருக்காது, யார் வீடு இடியுமோ, யார் உசுரு போகுமோன்னு ஆகிடும், எல்லா ஊரும் தண்ணீர் வடிஞ்சாலும், எங்க ஏரியா வடிய மாதக்கணக்காகிடும், நோய்பரவும், இதுக்கெல்லாம் ஒரே, ஒரு வடிகால் அதன் ஆக்கிரமிப்பை எடுத்து தூர்வாரிட்டா எங்க பேரூராட்சியே தப்பிச்சிடும், " என்கிறார்கள்.

இதேநிலமையில்தான் டெல்டா மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களின் நிலமையும் உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

வரலாறு காணாத கனமழை; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Unprecedented heavy rains in california

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பொழிந்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. 

அதன்படி, கலிபோர்னியா பகுதியில் நேற்று (06-02-24) வரலாறு காணாத கனமழைக் கொட்டித் தீர்த்தது. இதில், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட சில இடங்களில் 25 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இந்த வெள்ளத்தின் போது பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் பலரும் அதில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மணிக்கு 78 மைல் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றால் கிட்டத்தட்ட 8,75,000 வீடுகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பலரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

வரலாறு காணாத இந்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த மழை வெள்ளத்தால் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த வெள்ளம் குறித்து தேசிய வானிலை மையம் கூறியுள்ளதாவது, ‘5 முதல் 10 அங்குலங்கள் (12.7செ.மீ முதல் 25.4 செ.மீ) வரை பெய்துள்ளது. மேலும், இந்த மழையின் அளவு அதிகரிக்கக்கூடும்’ என்றும் தெரிவிக்கப்படுகின்றது.