Skip to main content

வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!

Published on 26/10/2021 | Edited on 26/10/2021

 

Northeast Monsoon - Chief Minister's instruction to district collectors!

 

வடகிழக்கு பருவமழை தொடர்பாக, சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (26/10/2021) காலை 11.00 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள், அரசுத்துறைச் செயலாளர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

 

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "வடகிழக்கு பருவமழையையொட்டி, அனைத்து துறையினரும் இணைந்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய வேண்டும். உயிர்காக்கும் மருந்துகள், உபகரணங்கள், பாம்புக் கடிக்கான மருந்து, ஆக்சிஜன் உருளைகளைத் தயாராக வைத்திருக்க வேண்டும். பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைப் போதிய அளவு இருப்பில் வைத்திருக்க வேண்டும். பருவமழை காலத்தில் மக்களுடன் இணைந்து அதிகாரிகள் செயல்பட வேண்டும். ஆழ்கடல் சென்றுள்ள மீனவர்களுடன் அதிகாரிகள் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும்.  

 

மாவட்டத்தில் பாதிப்பிற்குள்ளாகும் அனைத்து பகுதிகளையும் ஆய்வுசெய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். முழு கொள்ளளவை எட்டியுள்ள அணைகள், ஏரிகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உடைப்பு ஏற்படாமல் இருக்க அவ்வப்போது உபரி நீரை வெளியேற்றி அணை பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். வெள்ள அபாயம் ஏற்படுவதைத் தவிர்க்க மாவட்ட ஆட்சியர்கள் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். 

 

பொதுமக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை வழங்கி உபரி நீரைத் திறந்துவிட வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளைத் தாமதமின்றி மாவட்ட ஆட்சியர்கள் வழங்க வேண்டும். மழைக்காலத்தில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை இருப்பில் வைத்திருக்க வேண்டும். பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுவதுடன் பில்லர் பாக்ஸ்களை உயர்வான இடங்களில் வைக்கவும் வேண்டும். மழைநீர் தேங்காமல் இருக்க வடிகாலைத் தூர்வார வேண்டும். 

 

அறுவடை செய்த நெல் மணிகளைப் பாதுகாக்க வேண்டும். இயற்கையை முறையாக கையாண்டால் அது கொடை; கையாளவில்லையெனில் பேரிடராக மாறும். இயற்கையை முறையாக எதிர்கொள்ள தவறும்போது அது தான் யார் என்பதைச் சுட்டிக்காட்டிவிட்டுச் செல்கிறது. இயற்கையைக் கொடையாக எதிர்கொள்ளப் போகிறோமா? பேரிடராக மாற்றப் போகிறோமா? என்பது நம் கையில்தான் உள்ளது. பருவமழைக் காலத்தில் அவசர உதவிக்கு 1070, 1077 ஆகிய இலவச எண்களை மக்கள் தொடர்புகொள்ளலாம்" எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

கணேசமூர்த்தி மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Ganesamurthy's demise; Political leaders condole

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.  வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேசமூர்த்தியின் உயிரிழப்பு காரணமாக மதிமுக கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

nn

அவரின் மறைவுக்கு அவரது சொந்த கட்சியைச் சேர்ந்த வைகோ, அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்திக் குறிப்பில், 'ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். ஆற்றல்மிகு தளகர்த்தரான கணேசமூர்த்தியின் மறைவு சொல்லொணாத் துயரைத் தந்துள்ளது. அவர் பிரிவால் வாடும் மதிமுக தொண்டர்கள், திராவிட இயக்க பற்றாளர்களுக்கு என்னுடைய இரங்கல்' எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் 'மதிமுகவின் மூத்த அரசியல் முன்னோடி கணேசமூர்த்தி காலமான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கணேசமூர்த்தியை பிரிந்து வாடும் குடும்பத்தார், வைகோ உள்ளிட்ட நண்பர்களுக்கு ஆறுதல்' என கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார்.