North-South clash in Parvetta; Excitement from the melee

பார்வேட்டை உற்சவத்தின் பொழுது வடகலை பிரிவினரும் தென்கலை பிரிவினரும் கடுமையாக மோதிக் கொண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

காஞ்சிபுரத்தில் பார்வேட்டை உற்சவம் நடைபெற்றது. அப்பொழுது பெருமாள் ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது வடகலை பிரிவினருக்கும் தென்கலை பிரிவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியது. அப்பொழுது முதியவர் ஒருவர் மற்றொரு பிரிவினரைத்தாக்க முயல, மற்றொருவர் பதிலுக்கு கடுமையாக தாக்க முயன்றார். இதனால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மோதிக்கொண்டவர்களை தடுக்க முற்பட்டனர். தற்பொழுது இந்த வடகலை தென்கலை மோதல் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.