Skip to main content

வெளிமாநில தொழிலாளி கொலை! 

Published on 13/05/2022 | Edited on 13/05/2022

 

north indian youth passed away in work place

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ‘பு. மாம்பாக்கம்’ கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரமேஷ்(50). இவர், புதிதாக தனது ஊரிலேயே ஒரு வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இவரது புது வீட்டுக்கு டைல்ஸ் உள்ளிட்ட இதர பணிகளை செய்வதற்காக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது பவுன்குமார், 30 வயது அமீத் என இரண்டு பேரை கடந்த 3ஆம் தேதி முதல் அவரது வீட்டில் வேலை செய்ய அழைத்து வந்துள்ளார். 


அவர்கள் அவரது வீட்டில் தொடர்ந்து வேலை செய்து வந்தனர். இருவரும் அதே வீட்டின் மேல் மாடியில் தங்கி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி ஊருக்கு சென்று வருவதாக கூறி ரமேஷிடம் இருவரும் 2000 பணம் பெற்றுள்ளனர். அவர்கள் திரும்பி வேலைக்கு வரும் வரை வீட்டு வேலை நிறுத்தப்பட்டது. சில நாட்கள் கழித்து இதர கட்டுமான வேலைகளை செய்வதற்காக கொத்தனார், சித்தாள் சிலர் அங்கு வேலைக்கு சென்றுள்ளனர்.


அப்போது வீட்டின் முன் பகுதியில் பைப்லைன் போடுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் துர்நாற்றம் வீசியுள்ளது. மேலும் ரத்தக் கறை படிந்த துணிகள் கிடந்துள்ளன. மேலும், தோண்டிப் பார்த்தபோது அங்கு வேலை செய்து வந்த பவன்குமார் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், வீட்டு உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

 

டி.எஸ்.பி மகேஷ், இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன், சப்-இன்ஸ்பெக்டர் அருள் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து போன பவன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டைல்ஸ் பதிக்கும் வேலைக்கு வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பவுன்குமார் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.


இதுகுறித்து உளுந்தூர்பேட்டையில் உள்ள பவன்குமார் உறவினர் சங்கேஷ்வரன் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் படுகொலை செய்யப்பட்ட பவன்குமார் உடன் தங்கியிருந்த அமீத் தலைமறைவாக உள்ளதால் பவுன் குமாரை கொலை செய்து விட்டு தப்பி ஓடி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் அவரை தேடி வருகிறார்கள். அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது தொடர்பு கிடைக்கவில்லை. அது குறித்தும் போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள். மக்கள் குடியிருக்கும் கிராம பகுதியில் கழுத்து அறுக்கப்பட்டு இளைஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.