தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 17- ஆம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழடுக்கு பகுதிகளில் வளிமண்டலத்தின் பருவக்காற்று வீசத்தொடங்கியுள்ளது.

Advertisment

Northeast Monsoon to begin on Oct 17

மேலும் வடகிழக்கு பருவமழை இயல்பான அளவிலேயே பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதேபோல் தென்மேற்கு பருவமழை படிப்படியாக விலகும் என்றும் குறிப்பிட்டுள்ளது. வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.