வடசென்னை ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நலத்திட்ட உதவிகள்

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது ஏப்ரல் 14 வரை 21 நாட்கள் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமலும், பொருளாதார பற்றாக்குறை காரணமாகவும் குடும்பத்தை நடத்த முடியாமல் கடும் சிரமத்தில் உள்ளனர். இதனால் அரசியல் கட்சியினர் பல்வேறு சமூக நல அமைப்புகள் ஏழை எளிய மக்களுங்ககு பல்வேறு விதங்களில் உதவி வருகின்றனர்.

இந்தநிலையில் வடசென்னை ரஜினி மக்கள் மன்ற மகளிர் அணி சார்பாக ராயபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ரஜினி மக்கள் மன்ற மகளிர் அணியின் மாவட்ட செயலாளர் லட்சுமிவேலு இந்த உதவிகளை வழங்கினார்.

corona virus north chennai rajini makkal mandram
இதையும் படியுங்கள்
Subscribe