Skip to main content

பொங்கல் பண்டிகை நேரத்தில் தரமற்ற அரிசியா? - பெண்கள் போராட்டம்!

Published on 02/01/2021 | Edited on 02/01/2021

 

Non-standard rice during Pongal festival? Women struggle!

 

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த ஒழுகூர் கிராமத்தில் உள்ள கூட்டுறவு நியாய விலைக் கடையில், ஜனவரி 2-ஆம் தேதியான இன்று அரிசி வழங்கப்பட்டுள்ளது. அந்த அரிசியைப் பெற்ற அப்பகுதி மக்கள் அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

 

அந்த அரிசியில் நிறைய சிறு சிறு கற்கள் இருந்ததோடு, வழக்கத்தை விட அதிகமாக துர்நாற்றம் வீசியுள்ளது. இதுபற்றி நியாயவிலைக்கடை விற்பனையாளரிடம் மக்கள் கேட்டபோது, "எங்களுக்கு அனுப்பியதை தான் போடுறோம், நாங்க என்ன செய்ய முடியும்" என்றுள்ளார்கள். மேலும், "அரிசியை மாற்றித் தரவும், திரும்பப் பெறவும் முடியாது. அதற்கு வாய்ப்பில்லை" எனவும் சொல்லியுள்ளார்கள்.

 

Non-standard rice during Pongal festival? Women struggle!

 

சமைத்துச் சாப்பிட முடியாத நிலையில் உள்ள அரிசியை நாங்கள் என்ன செய்வது என ஆத்திரமடைந்த அக்கிராமப் பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கடையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

 

இதுபற்றி காவல்துறைக்கும், ராணிப்பேட்டை வட்ட வழங்கல் அலுவலருக்கும் தகவல் சென்றதன் அடிப்படையில், அங்கு வந்த அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தி, "நல்ல அரிசியாக இனி வழங்க ஏற்பாடு செய்கிறோம்" என சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.

 

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தரமற்ற அரிசியை நூற்றுக் கணக்கானவர்களுக்கு வழங்கியுள்ளனர் அதிகாரிகள். இந்த அரிசியைக் கொண்டு சமைத்துச் சாப்பிடவும் முடியாது. பொங்கல் பண்டிகையின் போது என்ன செய்வது என வேதனையை வெளிப்படுத்தியபடி சென்றனர் பொதுமக்கள்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எங்களுக்கு மாநகராட்சி வேண்டாம்! 100 நாள் வேலை தான் வேண்டும்! - போராட்டத்தில் மக்கள்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Pudukottai people are protesting that we don't want a corporation

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள 11 ஊராட்சிகளை இணைத்து புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பு வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே ‘வேண்டாம் மாநகராட்சி’ என்ற பெயரில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களை இணைத்து போராட்டக்குழு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பையடுத்து போராட்டம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம் கிராம மக்கள் ஒன்று கூடி திங்கள் கிழமை, வேண்டாம் மாநகராட்சி என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சியில் இருக்கும் எங்களுக்கு 100 நாள்  வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை கிடைக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு சலுகைகளும் கிடைக்கிறது. மேலும் சொத்துவரி, குடிநீர் வரி உள்பட பல்வேறு வரிகள் உயர்த்திக் கட்ட வேண்டும். குப்பை வரி வாங்குவாங்க ஆனா குப்பை அள்ளமாட்டாங்க. வேலையே இல்லாம இந்த வரியெல்லாம் எப்படி கட்ட முடியும். அதனால் வேண்டாம் மாநகராட்சி என்று கோரிக்கை முழக்கமிட்டனர்.

அதே நேரத்தில் மாநகராட்சியில் 100 நாள் வேலை கிடைக்காது. ஆனால் எங்களை சம்மதிக்க வைக்க வேலை தருவதாக சொல்வாங்க. அப்புறம் தரமாட்டாங்க என்கின்றனர் போராட்டத்தில் இருந்த பெண்கள். இது முதற்கட்ட போராட்டம் தான். தேர்தலுக்கு முன்பே இன்னும் பலகட்ட போராட்டங்களை 11 ஊராட்சி மக்களும் ஒன்று சேர்ந்து எடுப்பார்கள். இல்லை என்றால் தேர்தலை புறக்கணித்து ஆளும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர்.

Next Story

யானைகள் தொடர் அட்டகாசம்; வனத்துறையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 villagers staged a struggle against the forest department as the elephants continued to roar
கோப்புப்படம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளப்பாடி, கே.வலசை, கணவாய் மோட்டூர், அனுப்பு, டிபி பாளையம், உள்ளிட்ட பகுதிகள் தமிழக ஆந்திர எல்லையை ஒட்டி உள்ளது. இங்கு தொடர்ந்து யானைகள்  விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

மேலும் பயிர்களை தொடர்ந்து யானைகள் சேதப்படுத்தி வருவதாகவும் அதை கட்டுக்குள் கொண்டு வர வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதம் அடைந்து வரும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் கிராம மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடியாத்தம் - பரதராமி சாலையில் கணவாய் மோட்டூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் குடியாத்தம் பரதராமி சாலையில் சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரதராமி காவல்துறையினர் மற்றும் குடியாத்தம் வனத்துறையினர், மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர்  உறுதி அளித்தனர். இதனையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.