Skip to main content

தரமற்ற பெரம்பலூர் குடிசை மாற்று வாரிய கட்டடம்... ஆட்சியர் நேரில் ஆய்வு! 

Published on 20/08/2021 | Edited on 20/08/2021

 

Non-standard Perambalur cottage replacement board building ... Collector inspects in person!

                                                                 கோப்புப்படம் 

 

கூவம், அடையாறு கரையோரம் குடிசையில் வசிக்கும் மக்களை மறு குடியமர்த்த, சென்னை புளியந்தோப்பு கேசவ பிள்ளை பூங்கா பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் 2018ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை இரண்டு கட்டங்களாக கட்டப்பட்டன. முதற்கட்டமாக 764 வீடுகளும் இரண்டாவது கட்டமாக 1,056 வீடுகளும் என மொத்தம் 1,820 வீடுகள் கட்டப்பட்டன. கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் அருகே குடிசைகளில் வசிப்பவர்கள் பயனாளிகளாக அந்தக் குடியிருப்பில் குடியேறி இரண்டு - மூன்று மாதங்களே ஆகும் நிலையில், கட்டடத்தில் பல இடங்களில் தொட்டாலே சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து விழும் அளவிற்கு தரமற்ற முறையில் இருப்பதாக அங்கு குடியிருக்கும் மக்கள் அச்சம் தெரிவித்த நிலையில், முதற்கட்டமாக இந்த விவகாரத்தில் குடிசை மாற்று உதவி பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் ஆகியோர் இன்று (20.08.2021) தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

 

இந்த விவகாரம் பூதாகரம் ஆகியிருக்கும் நிலையில், இதுகுறித்து நேற்று  சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், பெரம்பலூரிலும் இதேபோல் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்பில் தொட்டாலே கொட்டும் அளவிற்கு சிமெண்ட் பூச்சுகள் இருப்பதாக மக்கள் அச்சம் தெரிவித்தனர்.

 

Non-standard Perambalur cottage replacement board building ... Collector inspects in person!

 

பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் பகுதியில் 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்டுமானப் பணி நிறைவடைந்து இந்த ஆண்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அந்தக் குடியிருப்பும் தரமற்று இருப்பதாக புகார் எழுந்ததையடுத்து, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வேங்கடபிரியா மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுக்குப் பிறகு அந்தக் குடியிருப்பில் உள்ள பழுதுகளை சரிசெய்ய மாவட்ட ஆட்சியர் வேங்கடபிரியா குடிசை மாற்று வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதனையடுத்து கட்டடத்தைக் கட்டிய ஒப்பந்ததாரருக்கான கடைசி பில் 2 கோடி ரூபாய் நிறுத்திவைக்கப்பட்டதாக குடிசை மாற்று வாரிய அதிகாரி அழகு பொன்னையா தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“துறையூர் பகுதியில் புதிய அரசு கலைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை” -அருண் நேரு உறுதி

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Arun Nehru confirmed Proceedings to set up a new government art college in Thuraiyur area

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றிய பகுதியான பச்சமலையில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பச்சை மலையில் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு பச்சமலை டாப் - செங்காட்டுப்பட்டியில் வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:- தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற தினத்திலிருந்து துறையூர் தொகுதிக்கு ஏராளமான நல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. துறையூர் நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு துறையூர் - ஆத்தூர் புறவழிச்சாலை திட்டம் - 2 சுமார் 48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் துறையூர் பகுதிக்கு 108 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனி கூட்டுக் குடிநீர் திட்டம் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

திமுக வேட்பாளர் வெற்றி பெற்றவுடன் அடிவாரம் மற்றும் நாகலாபுரம் பகுதியில் தொழில் செய்து வரும் சிற்ப கலைஞர்களுக்கு தனி இடம் ஒதுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். துறையூர் தொகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் கலை மற்றும் அறிவியல் துறை படிப்புகளை படிப்பதற்கு தற்சமயம் திருச்சி, முசிறி, பெரம்பலூர் உள்ளிட்ட கல்லூரிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த சிரமத்தினை தவிர்க்கும் பொருட்டு துறையூர் பகுதியில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். துறையூர் தொகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிட சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பச்சமலை பகுதியில் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படும், மரவள்ளிக்கிழங்கு பதப்படுத்தும் கிடங்கு அமைக்கப்படுவதுடன் கொள்முதல் நிலையமும் அமைக்கப்படும். சாலை வசதி மோசம் அடைந்ததை தொடர்ந்து அவை சரி செய்து போடப்பட்டு வருகிறது. கோம்பை வண்ணாடு ஊராட்சிகளுக்கு மருத்துவ வசதி கிடைத்திட புதிய மருத்துவமனை கொண்டுவர உரிய நடவடிக்கை எடுப்போம். மேலும் உப்பிலியபுரம் பகுதியில் உள்ள மக்களுக்காக புளியஞ்சோலையில் கிணறு வெட்டி தண்ணீர் இல்லாத கிராமப் பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்திட திமுகவை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுங்கள்.இவ்வாறு பேசினார்.

பச்சமலை டாப் - செங்காட்டுப்பட்டியில் பிரச்சாரத்தை துவக்கிய அருண் நேரு தொடர்ந்து தண்ணீர் பள்ளம், புத்தூர், நச்சினிப்பட்டி, த. மங்கபட்டி, த. பாதர்பேட்டை, த. முருங்கப்பட்டி, கொப்பம்பட்டி, கோட்டப்பாளையம், பி. மேட்டூர் உள்ளிட்ட உப்பிலியபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 24 கிராமங்களில் வாக்குகள் சேகரித்தார்.

பிரச்சாரத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், மாவட்ட அரசு ஆதிதிராவிடர் குழு தலைவர் மகாலிங்கம், உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர்கள் முத்துச்செல்வன், அசோகன், திருச்சி வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் கனகராஜ், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார், பேரூர் கழகச் செயலாளர்கள் நடராஜன், வெள்ளையன் நகர்மன்ற தலைவர் செல்வராஜ், நகர துணை செயலாளர் இளங்கோவன் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு வாக்குகள் சேகரித்தனர். இதைத்தொடர்ந்து பச்சமலையில் உள்ள தண்ணீர் பள்ளம், புதூர், நச்சிலப்பட்டி உள்ளிட்ட மலை கிராமங்களில் மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது திமுக வேட்பாளர் அருண் நேருவுக்கு மலைவாழ் பெண்கள் சிறப்பாக வரவேற்று ஆரத்தி எடுத்து ஆதரவு தெரிவித்தனர்

Next Story

அருண்நேரு கிராமம் கிராமமாக தீவிர பிரச்சாரம்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Arun Neru village to village campaign highlighting the achievements of the DMK government

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண்நேரு, பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்தில் கிராமம், கிராமமாக சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி  வாக்குகள் சேகரித்தார்.

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண்நேரு, பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்தில் உள்ள  நாரணமங்கலம் கிராமத்தில் வாக்குகள் சேகரித்தார். நாரணமங்கலம் மந்தைவெளியில் திரண்டிருந்த மக்களிடையே வேட்பாளர் கே.என். அருண் நேரு பேசியதாவது:- இந்தியா கூட்டணி தேர்தல் அறிக்கையில் நல்ல விஷயங்கள் நிறைய கூறப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி அனைத்தையும் நிறைவேற்றுவார்கள்.

தமிழகத்தில் முதலமைச்சரின் சிறப்பு திட்டமான காலை உணவு திட்டம், மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை திட்டம், மகளிருக்கு இலவச பேருந்து பயணத்திட்டம், உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடி கல்வி, இல்லம் தேடி மருத்துவம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று தி.மு.க.அரசின் பல்வேறு திட்டங்களை எடுத்துக் கூறி பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். 

மேலும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று, நாரணமங்கலம் மந்தைவெளியில் திரண்டிருந்த பொதுமக்களிடம் வேட்பாளர் கே.என்.அருண் நேரு பேசினார். தொ.மு.ச.வினர் தொ.மு.ச.கவுன்சில் பேரவை மாவட்ட தலைவர் கே.கே.எம்.குமார், தொ.மு.ச.கவுன்சில் பேரவை மாவட்ட  செயலாளர் ஆர்.ரெங்கசாமி ஆகியோர் தலைமையில் கிராமங்கள் தோறும் துண்டு பிரசுரங்கள் வழங்கி வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கூறினார்கள். 

இந்த பிரச்சாரத்தில் பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழுத் தலைவருமான என்.கிருஷ்ணமூர்த்தி, மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் செ.வல்லபன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெ.கார்மேகம், கொளக்காநத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் என்.ராகவன், காங்கிரஸ் கட்சி தேனூர் கிருஷ்ணன்,  மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் வ.சுப்ரமணியன், ஆர்.அருண், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ரா.சிவா, மாவட்ட பிரதிநிதி எஸ்.அழகுவேல், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆர்.வேணுகோபால், கிளைச் செயலாளர் எஸ்.கே.வைத்தியநாதன், விஜயகுமார்,சின்னசாமி, சீனிவாசன், ஞானசுந்தரம், ரவி, வக்கீல், கிளை நிர்வாகிகள் பெ.வரதராஜ், செல்வக்குமார், பெ.முத்துகுமார், ரா.நிதிஷ்குமார்,பிச்சை, கலைமணி, மு.அசோக், மாவட்ட, நகர, பேரூர் நிர்வாகிகள், இளைஞரணி, மகளிர் அணி, கிளைச் செயலாளர்கள், கழகத் தொண்டர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.