Skip to main content

தரமற்ற மின்கம்பம்... தொழிலாளர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு... தொழிலாளர்கள் குற்றச்சாட்டு

Published on 09/07/2020 | Edited on 09/07/2020

 

Electricity

 

தரமற்ற மின்கம்பத்தில் ஏறி பணியாற்றியபோது மின்கம்பம் உடைந்து விழுந்ததில் தொழிலாளர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்றும் மற்றொரு தொழிலாளர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் விழுப்புரம் மின் கழக தொ.மு.சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

 

மேலும், விழுப்புரம் மின் திட்டத்தில் களப் பணியாளர்கள் பற்றாக்குறையால், அலுவலர்களின் நிர்பந்தத்தில் மிகக் குறுகிய நேரத்தில் அவசரமாகப் பணிகளைச் செய்ய நேரிடும். அந்தந்த பிரிவு அலுவலர்கள், பிரிவு அலுவலகத்தில் பணி புரியும் முகவர்கள், மின் பாதை ஆய்வாளர்கள், கம்பியாளர்களுக்கு வேலை செய்யக் கட்டளை வரும்போது பிரிவு அலுவலருக்குப் பயந்து அவர் சொல்லும் முன் அனுபவம் இல்லாத தினக் கூலிப் பணியாளர்களோடு சென்று பணியாற்றுவதாலும் தரமற்ற தளவாடச் சாமான்களைக் கொண்டு பணிகளைச் செய்வதாலும்தான் விபத்துகள் அடிக்கடி நடக்கிறது. 

 

விபத்தில் சில சமயங்களில் தொழிலாளர்கள் மரணிக்கும் சம்பவமும் நிகழ்கிறது. மரணம் அடையும் நிரந்தர பணியாளருக்கு ரூ.3. லட்சம் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, ஊனம் அடைந்தவருக்கு நீண்ட போரட்டத்திற்குப் பிறகு காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை, அவ்வளவுதான். 

 

அது போன்ற அதிர்ச்சி தரும் நிகழ்வு 07.07.2020 திண்டிவனம் கோட்டம் திருவக்கரை பிரிவு அலுவலரால் அரங்கேறியுள்ளது. செஞ்சி பகுதியில் இருந்து அழைத்து வரப்பட்ட முன் அனுபவம் இல்லாத தினக்கூலித் தொழிலாளர்கள் சுமார் 20 நபர்களைக் கொண்டு பிரிவு அலுவலக களப்பணிகளை 3 விதமாகப் பிரித்து பணி ஒதுக்கீடு செய்து களப்பணி வாரியத்தின் மூலம் பிரிவு அலுவலரால் வழங்கப்பட்ட 9 மீட்டர் தரமற்ற கம்பம் மற்றும் தளவாடச் சாமான்களைப் பயன்படுத்தி உயர் மின் அழுத்த பாதை பணிகளை மேற்கொண்டனர். அப்போது பிடுங்கி வளைந்த காரணத்தினால் மின் கம்பம் உடைந்ததால் உச்சியில் ஏறி பணி செய்து கொண்டிருந்த கோ.தங்கமணி என்கிற தொழிலாளி சம்பவ இடத்திலேயே இறந்தும் ஏ.பிரகாஷ் என்பவர் அடிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வருவது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும்.

 

இது போன்ற ஒப்பந்த அனுமதி பெறாமல் நமது விழுப்புரம் மின் திட்டத்தில் பல பிரிவுகளில் (குறிப்பாக திண்டிவனம், செஞ்சி கோட்டம்) பிரிவு அலுவலரின் செயல்களைக் கோட்ட/திட்ட அலுவளர்களிடம் மின் கழக தொ.மு.சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டும் இது பற்றி இந்த விபத்து வரை செவி சாய்க்கவில்லை.

 

இனியாவது கோட்ட/திட்ட நிர்வாகம் செவி சாய்த்து தன்னிச்சையாகச் செயல்படும் உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின்பொறியாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து  உயிர் பலியினைத் தடுக்க வேண்டும். மேலும், திட்டத்தில் கொள்முதல் செய்து அளிக்கப்படுகிற தளவாடச் சாமான்களைப் பரிசோதனை செய்யும் அலுவலர்கள் (Check Measurement Officer) பணியாளர்களின் உயிர்களைத் தங்களது உயிராக நினைத்து நேரடியாக பண்டக சாலைக்குச் சென்று தளவாடப் பொருட்களை சோதனை செய்து களப் பணியாளர்களின் உயிர் பலியைத் தடுத்திடவும் உங்களின் ஒருவராகக் கேட்டு கொள்கிறோம் என விழுப்புரம் மின் கழக தொ.மு.சங்கம் கூறியுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.