Advertisment

மது அருந்த பணம் தராததால் தற்கொலை - போலீசார் வழக்குப்பதிவு

non-payment of alcohol-Police registered a case

Advertisment

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த கரளவாடிதேவி நகரை சேர்ந்தவர் பசுவராஜ் (60). திருமணம் ஆகி இரண்டு மகன்களும்ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் திருமணமாகி தந்தையுடன் வசித்து வருகிறார். மகளுக்கு திருமணமாகி கணவருடன் தனியாக வசித்து வருகிறார். இளைய மகன் லிங்கண்ணா(32)கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில் லிங்கண்ணாவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் தினமும் குடிப்பதற்கு தாய், தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல் கரளவாடி பஸ் நிறுத்தம் அருகே இரவில் உட்கார்ந்து இருந்தார். பின்னர் வீட்டுக்கு வந்த லிங்கண்ணா குடிப்பதற்கு மீண்டும் பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு தங்களிடம் பணம் இல்லை என்று அவர்கள் கூறிவிட்டனர்.

பின்னர் லிங்கண்ணாவை சாப்பிட அவரது தாய் அழைத்தார். உனது சாப்பாடு எனக்கு தேவை இல்லை. குடிப்பதற்கு பணம் தரவில்லை என்றால் இனிமேல் வீட்டுக்கு வரமாட்டேன். தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி வீட்டின்பின்பக்கம் உள்ள குளத்தை நோக்கி லிங்கண்ணா வேகமாக ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மகன் பின்னால் வேகமாக ஓடினர்.

Advertisment

ஆனால் அதற்குள் லிங்கண்ணா குளத்தில் குதித்து விட்டார். இதனால் பதறிய அவரது பெற்றோர் இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். அதற்குள் லிங்கண்ணா குளத்தில் மூழ்கி விட்டார். இது குறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குளத்தில் தேடி சிறிது நேரத்தில் லிங்கண்ணாவை பிணமாக மீட்டனர். பின்னர் அவரதுஉடல் பிரேதப் பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

incident police Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe