Skip to main content

மது அருந்த பணம் தராததால் தற்கொலை - போலீசார் வழக்குப்பதிவு

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

non-payment of alcohol-Police registered a case

 

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த கரளவாடி தேவி நகரை சேர்ந்தவர் பசுவராஜ் (60). திருமணம் ஆகி இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் திருமணமாகி தந்தையுடன் வசித்து வருகிறார். மகளுக்கு திருமணமாகி கணவருடன் தனியாக வசித்து வருகிறார். இளைய மகன் லிங்கண்ணா(32) கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

 

இந்நிலையில் லிங்கண்ணாவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் தினமும் குடிப்பதற்கு தாய், தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல் கரளவாடி பஸ் நிறுத்தம் அருகே இரவில் உட்கார்ந்து இருந்தார். பின்னர் வீட்டுக்கு வந்த லிங்கண்ணா குடிப்பதற்கு மீண்டும் பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு தங்களிடம் பணம் இல்லை என்று அவர்கள் கூறிவிட்டனர்.

 

பின்னர் லிங்கண்ணாவை சாப்பிட அவரது தாய் அழைத்தார். உனது சாப்பாடு எனக்கு தேவை இல்லை. குடிப்பதற்கு பணம் தரவில்லை என்றால் இனிமேல் வீட்டுக்கு வரமாட்டேன். தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி வீட்டின் பின்பக்கம் உள்ள குளத்தை நோக்கி லிங்கண்ணா வேகமாக ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மகன் பின்னால் வேகமாக ஓடினர்.

 

ஆனால் அதற்குள் லிங்கண்ணா குளத்தில் குதித்து விட்டார். இதனால் பதறிய அவரது பெற்றோர் இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். அதற்குள் லிங்கண்ணா குளத்தில் மூழ்கி விட்டார். இது குறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குளத்தில் தேடி சிறிது நேரத்தில் லிங்கண்ணாவை பிணமாக மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.