Skip to main content

காவலர் தேர்வை நடத்தாததை கண்டித்து அரசாணை நகலுக்கு மலர்தூவி, சங்கு ஊதி  நூதன ஆர்ப்பாட்டம்! 

Published on 03/09/2020 | Edited on 03/09/2020

 

the non-conduct of the police examination!

 

 

புதுச்சேரி மாநிலத்தில் காவலர் தேர்வு கடந்த பத்தாண்டுகளுக்கு பிறகு  2018-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது இத்தேர்வில் வயது வரம்பு தொடர்பாக தளர்வு கேட்டு தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. மேலும்  நீதிமன்றத்திலும்  வழக்கு நடத்தப்பட்டு வயது வரம்பு தளர்வுக்கு அனுமதிக்கப்பட்டது.  அதையடுத்து 390 காவலர் பணியிடங்களுக்கு 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் காவலர் தேர்வு அறிவிப்பு வெளியிட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் இதுநாள் வரையில் காவலர் தேர்வு நடத்தவில்லை.

 

இந்நிலையில் காவலர் தேர்வு நடத்தாததை கண்டித்து புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு புதுச்சேரி  மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சீ.சு சுவாமிநாதன், பொதுச் செயலாளர் முருகன், சிலம்பரசன், அபிநயன், வேல்முருகன், புவியரசன், தமிழ்ச்செல்வன் தமிழ்வேந்தன், வினோத்  மற்றும் புதுச்சேரி நகர தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், செல்வகுமார்,  மக்கள் நல்வாழ்வு இயக்கம் ராஜா, இந்திய தேசிய மக்கள் முன்னணி கலைப்பிரியன், புதுச்சேரி மக்கள் எழுச்சி பேரவை வேல்முருகன், அரசியல் களஞ்சியம் சீனு கந்தகுமார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியை கடைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதுபற்றி மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சீ.சு.சுவாமிநாதன் கூறுகையில்,  "காவலர் தேர்வு அறிவிப்பு வெளியிட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. வயதுவரம்பு தொடர்பாக தளர்வு கேட்டு எங்கள் அமைப்பு சார்பாக  தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. மேலும்  நீதிமன்றத்திலும்  வழக்கு நடத்தப்பட்டு வயது வரம்பு தளர்வுக்கு அனுமதிக்கப்பட்டது. 

 

இந்த நிலையிலும் இதுநாள்வரையில் தேர்வு நடத்தவில்லை.  பின் வரும் காலம் பருவமழை காலம் என்பதால் இதற்கு மேலும் காலம் தாழ்த்தினால் மைதானத்தில் தேர்வு நடத்துவது சாத்தியமாகாது. காவலர் தேர்வு  அறிவித்த ஆறு மாதங்களில் நடத்த வேண்டும். ஏனென்றால் தேர்வில் விண்ணப்பிக்க கூடியவர்கள் தங்களது திறமையை எழுத்தின் மூலமாக மட்டுமல்லாமல் மைதான தேர்விலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது விண்ணப்பித்த போது 50 கிலோ எடையில் இருந்த இளைஞர்கள் இரண்டாண்டுகளில் உடல் தகுதியை இழந்த சூழல் உருவாகியுள்ளது. மேலும் தொடர்ந்து மைதான தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான பயிற்சிக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் காவல்துறை காவலர் தேர்வு நடத்தாமல் காலம் தாழ்த்துவதற்கு பின்னணியில் துணைநிலை ஆளுநர் அவர்களின் சதி இருக்கிறதோ என்ற சந்தேகம் எமது அமைப்புக்கு இருக்கிறது.

 

ஏனென்றால் தொடர்ச்சியாக புதுச்சேரி மாநிலத்தின் முதல்வர் காவலர் தேர்வு நடத்துவதற்கு பல்வேறு கூட்டங்கள் நடத்தியும்,  காவலர் தேர்வு உடனடியாக நடத்த வேண்டும் என பலமுறை ஆணையிட்டும் கூட இதுநாள் வரை தொடர்ந்து காவலர் தேர்வு நடத்தாமல் காலம் தாழ்த்தியதற்கான காரணம் புரியவில்லை.  வயதுவரம்பு கேட்டு இளைஞர்கள் போராடியபோது மேதகு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவர்கள் அந்த வயது வரம்பை தளர்வு தரமாட்டேன் என உறுதியாக இருந்தார்.  நீதிமன்றமும்,  உள்துறை அமைச்சகமும் தலையிட்டு வயது வரம்பு தளர்வு ஏற்படுத்தி கொடுத்தது இதன்காரணமாக துணைநிலை ஆளுநர் திட்டமிட்டு இந்த மாநில அரசு இந்த தேர்வை நடத்தி விடக்கூடாது என்பதற்காக தலைமை செயலர்,  காவல்துறை உயரதிகாரிகளை தனது அதிகாரத்தின் மூலம் தடுத்து நிறுத்தி காவலர் தேர்வு நடத்தாமல் இழுத்தடிக்கின்றாரோ என்ற சந்தேகம் எங்களுக்குள் இருக்கிறது.

 

எனவே எங்களது எதிர்ப்பை வெளிக்காட்டும் விதமாக இன்று காவலர்தேர்வு அறிவித்த இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக சங்கு ஊதி, மணியடித்து மலர் அஞ்சலி செலுத்தி உள்ளோம். உடனடியாக தேர்வு நடத்தாவிட்டால் போராட்டம் தீவிரமாகும்"  என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.