Skip to main content

அடிப்படை வசதியே இல்லாத ரயில் நிலையம்- தென்னக ரயில்வே அதிகாரிகள் கூட்டத்தில் திருவண்ணாமலை எம்.பி புகார்.

Published on 06/09/2019 | Edited on 06/09/2019

இந்தியாவில் செயல்படும் ரயில்வே மண்டலங்களில் தென்னக ரயில்வே மண்டலம் மிகப்பெரியது. அதிக லாபத்தை ஈட்டித்தரும் மண்டலமாக தென்னக ரயில்வே மண்டலம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறையை சீரமைப்பதற்காக ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள ரயில்வே உயர் அதிகாரிகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களிடம் கருத்து மற்றும் கோரிக்கைகளை கேட்பார்கள்.

அதன்படி தென்னக இரயில்வே ஆலோசனைக்கூட்டம் திருச்சியில் உள்ள ரயில்வே துறைக்கான அலுவலகத்தில் செப்டம்பர் 4ந்தேதி நடைபெற்றது. இதில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, மக்களவை உறுப்பினர்கள் மதுரை வெங்கடேசன், திருவண்ணாமலை சி.என்.அண்ணாதுரை, பெரம்பலூர் பாரிவேந்தர் உட்பட பெரும்பாலான திமுக எம்.பிக்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.

Non-basic railway station  Thiruvannamalai MP complains at Southern Railway officials meeting


இதில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை அதிகாரிகளிடம், சாலை போக்குவரத்தில் தமிழ்நாட்டிலேயே சென்னை- திருவண்ணாமலை அதிக வருமானம் ஈட்டித் தருகிறது. திருவண்ணாமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், மாதந்தோறும் 15லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பௌர்ணமி அன்று வருகை தருகின்றனர். எனவே சென்னை- திருவண்ணாமலை இரயில் சேவையை உடனடியாக தொடங்கப்பட வேண்டும்.

திண்டிவனம்- திருவண்ணாமலை புதிய இரயில் பாதை பணிகள் தற்போது நில ஆர்ஜிதப் பணிகள் முடிவுற்ற நிலையில் அடுத்தகட்ட பணிகளை உடனடியாக தொடங்கவேண்டும். இத்திட்டம் முழுமையாக மக்களுக்கு பயனடைய வேண்டுமெனில் செங்கம் வழியாக ஜோலார்பேட்டை வரை ரயில் பாதை அமைக்கும் புதிய திட்டம் அறிவிக்க வேண்டும்.

Non-basic railway station  Thiruvannamalai MP complains at Southern Railway officials meeting


வியாபாரிகள், பொதுமக்கள் நீண்டநாள் கோரிக்கையான ஹவுரா- புதுச்சேரி அதிவிரைவு வண்டி திருவண்ணாமலை இரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். திண்டிவனம் இரயில்வே கேட் மேம்பாலப் பணிகள் நடைபெறுவதாலும், நகரில் இரயில்வே கேட்டை கடக்கும் போதும், அதிக போக்குவரது நெரிசல் ஏற்படுவதால் இரண்டு சுரங்கப்பாதை அமைத்து தரவேண்டும்.

திருவண்ணாமலை இரயில் நிலையம் மிகவும் மோசமான கட்டமைப்புடன், விளக்கு வசதி, கழிப்பிட வசதி, சிசிடிவி கேமிரா வசதி, மேற்கூரை வசதிகள் இல்லாமல் குறிப்பாக இரயில் நிலையத்தில் பெயர் பலகையே இல்லாமல் உள்ளது. ஆகையால் திருவண்ணாமலை இரயில் நிலையம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து பேசிவிட்டு வந்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

சித்ரா பௌர்ணமி; அரசு போக்குவரத்துக் கழகம் முக்கியத் தகவல்! 

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Chitira Poornami Govt Transport Corporation Important Information

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “23.04.2024 (செவ்வாய் கிழமை) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 22/04/2024 அன்று 527 பேருந்துகளும் மற்றும் 23/04/2024 அன்று 628 பேருந்துகளும்  இயக்கப்பட உள்ளன.

மேலும் சென்னை மாதவரத்திலிருந்து 22/04/2024 அன்று 30 பேருந்துகளும் 23/04/2024 அன்று 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அதே போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 அன்று 910 பேருந்துகளும் 23/04/2024 அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.