ஞாயிறு ஊரடங்கு... மீன் மார்க்கெட்டில் கூடிய மக்கள் (படங்கள்)

தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தியபோதும், கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மேலும் சில புதிய கட்டுப்பாடுகள்தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு இன்று (24/04/2021) வெளியிட்டுள்ளது.அதன்படி, திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கூட்ட அரங்குகள், பார்கள் இயங்க அனுமதி இல்லை. பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை. சென்னை மாநகராட்சி உள்படமாநகராட்சிகள், நகராட்சிகளில்சலூன், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதியில்லை. புதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பதிவு கட்டாயம். ஓட்டல்,டீ கடைகளில் பார்சலுக்கு மட்டுமேஅனுமதி. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தால் இ-பதிவுகாட்டவேண்டும். வழிபாட்டுத் தலங்களில் மக்களுக்கு அனுமதி இல்லை.

தனியார், அரசுப் பேருந்துகளில் நின்றுகொண்டுபயணிக்க அனுமதியில்லை. இறுதி ஊர்வலங்களில் 25 பேரும், திருமண நிகழ்ச்சியில் 50 பேரும்மட்டும் கலந்துகொள்ளஅனுமதி. கோவில் குடமுழுக்கில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. கோயில் ஊழியர்கள் மட்டும் பங்கேற்கலாம். குறைந்தபட்சம் 50 சதவிகிதம் ஐ.டி ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக மீன்கள் வாங்க நொச்சிக்குப்பம் மீன் மார்க்கெட்டில் கூட்டம் கூடியது.

corona virus fish market Market
இதையும் படியுங்கள்
Subscribe