Advertisment

''யார் மனசும் நோகக்கூடாதுங்க'' - வைரலாகும் வாக்குச் சீட்டு!

'' Nobody should mind '' - a punch in every symbol!

Advertisment

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று (12.10.2021) அறிவிக்கப்பட இருக்கின்றன. 74 வாக்கு எண்ணும் மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

வாக்கு எண்ணும் பணியில் 30,245 அலுவலர்களும் பாதுகாப்புப் பணியில் 6,278 போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட உள்ளன. https://tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து சின்னத்திற்கும் சீல் குத்தி வாக்களித்த வாக்குச் சீட்டு படிவத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி, சமூகவலைதளத்தில் வைரலாகிவருகிறது. ‘யார் மனசும் நோகக்கூடாதுங்க’ உள்ளிட்ட கேப்ஷன்களில்கேலியாக இந்தப் புகைப்படம் பகிரப்படுகிறது. வடிவேலு காமெடி காட்சி ஒன்றுடன் ஒப்பிட்டும் இந்தப் புகைப்படம் வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டுவருகிறது.

local body indirect election
இதையும் படியுங்கள்
Subscribe