Skip to main content

அவள் மீது எனக்கு நம்பிக்கை இல்ல சார்... டிக்-டாக்கில் வாலிபருடன் பழகிய மனைவி... விரத்தியில் கணவர்...

Published on 21/02/2020 | Edited on 21/02/2020

 

வேலூர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் ஒருவருக்கு, 30 வயதில் மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவரது மனைவி வேலைக்கு செல்லவில்லை. வீட்டில் குழந்தைகளை பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். வீட்டில் இருந்த மனைவிக்கு ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கிக்கொடுத்துள்ளார். 

 

 tik tok



 

செல்போனில் மூழ்கிய அந்த பெண், டிக்டாக் செயலி பற்றி அறிந்துள்ளார். அதனை கற்றுக்கொண்ட அவர், அந்த செயலியில் பாடல், நடனம், வசனம் உள்ளிட்டவற்றை வீடியோவாக வெளியிட்டுள்ளார். 

 

இவரது பதிவுகளை வேலூரில் தங்கி பணிபுரியும் வெளியூர் நபர் ஒருவர் பார்த்துள்ளார். தொடர்ந்து பார்த்த அவர் அதனை லைக் பண்ணியுள்ளார். பின்னர் கமெண்ட் கொடுத்து பின் தொடர்ந்துள்ளார். தொடர்ந்து இதேபோல் கமெண்ட் கொடுத்து பழகிய இவர்கள், ஒருவருக்கு ஒருவர் செல்போன் எண்ணை கொடுத்து பேசி பழகியுள்ளனர். பின்னர் நேரில் சந்தித்து பேசி பழகியுள்ளனர். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

 

டிக்டாக் மற்றும் அந்த வாலிபருடன் பழகியதால் வீட்டில் கணவன், குழந்தைகளை கவனிக்காமல் இருந்தள்ளார். மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர், ஒரு நாள் செல்போனை எடுத்து பார்த்துள்ளார். அதில் தனது மனைவி டிக்டாக்கில் இருப்பதும், ஒரு வாலிபருடன் அடிக்கடி பேசியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து நமக்கு குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தை ஒழுங்காக பார்த்துக்கொள், இந்த விசயம் நமது பெற்றோருக்கு தெரிந்தால் அசிங்கம் என அறிவுரை கூறியுள்ளார்.

 


 

 

 

இருப்பினும் அந்த பெண் அதை கேட்கவில்லை என்பதால், வேலூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரை பெற்ற போலீசார், அந்த பெண்ணிடம் பழகிய வாலிபரை அழைத்து அறிவுரை கூறியுள்ளனர். அப்பவும் கேட்கவில்லை என்பதால் அந்த வாலிபர் வேலை செய்யும் நிறுவனத்தில் அந்த வாலிபர் பற்றி போலீசார் சொல்லியுள்ளனர். இதையடுத்து அந்த வாலிபரை அந்த நிறுவனம் வேலையைவிட்டு அனுப்பிவிட்டது. பின்னர் போலீசார் அந்த வாலிபரை அழைத்து அறிவுரை கூறி அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து அந்த பெண்ணுக்கும் போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர். 

 

இருப்பினும் அந்த பெண்ணின் கணவர், மனைவி மீது தனக்கு நம்பிக்கை இல்லை. எவ்வளவு அறிவுரை கூறினாலும் அவள் கேட்பது போல் தெரியவில்லை. அதனால் அவளை விவாகரத்து செய்யும் முடிவு எடுத்திருப்பதாக கூறியுள்ளார். செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து குழந்தைகளை பற்றி நினைக்குமாறு உங்கள் மனைவிக்கு அறிவுரை கூறியுள்ளோம். நம்பிக்கையுடன் வாழ்க்கையை தொடங்குங்கள் என்று அவருக்கும் அட்வைஸ் செய்து அனுப்பியுள்ளனர் போலீசார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடுத்தடுத்து நிகழ்ந்த தற்கொலைகள்; புதுமண தம்பதிகளுக்கு நேர்ந்த பரிதாபம்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Husband lost their life over wife passed away

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கீழ்கிருஷ்ணாபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ஆடுதுறை ரவி(58). இவர் அரசு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு பூவரசன்(25) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில், மூத்த மகன் பூவரசனும் கந்தநேரி அடுத்த கழனிபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வயா(20) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், நேற்று மாலை ஐஸ்வர்யா தோழியின் நிச்சயதார்த்த விழா பள்ளிகொண்டா பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. அதற்குத் தன்னை அழைத்துச் செல்லுமாறு தன் கணவரிடத்தில் ஐஸ்வர்யா வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. 

பூவரசனும் அவரின் தாயாரை பள்ளிகொண்டா பகுதியில் நடைபெறும் வாரச் சந்தைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறியதாகவும் அதற்காக கணவன் மனைவி இடையே சிறிய அளவிலான வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பூவரசன் தன் தாயை அழைத்துக் கொண்டு பள்ளிகொண்டாவில் உள்ள வாரச்சந்தைக்கு சென்றுள்ளார். பெண் தோழியின் நிச்சயதார்த்த விழாவிற்கு அழைத்துச் செல்லாததால் மனமுடைந்த ஐஸ்வர்யா வீட்டினுள்ளே படுக்கையறையில் தூக்கிட்டுக் கொண்டுள்ளார்.

சந்தைக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிய பூவரசன், ஐஸ்வர்யா தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து உடனடியாக ஐஸ்வர்யாவை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஐஸ்வர்யாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் முன்பே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த கணவர், இன்று அதிகாலை மருத்துவமனை வளாகத்திலேயே விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவரிடம் காட்டிய போது அவரும் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் ஏற்பட்ட சிறு தகராற்றால், கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கணவன் மனைவிக்கிடையே தகராறு; மன வேதனையில் மாமியார் எடுத்த விபரீத முடிவு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Woman lost their life in grief

ஈரோடு சி.என்.சி காலேஜ் அருகே கொத்துக்காரர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மேகலா (49). கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகள் ஜனனி. மேகலாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஜனனிக்கு திருமணம் ஆகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தாய் மேகலா வீட்டிற்கு வந்துவிட்டார் ஜனனி. தனது மகள் கணவருடன் கோபித்துக் கொண்டு வந்ததால் மேகலா கடந்த சில நாட்களாகவே மன வேதனையில் இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில், கேரளாவிற்கு ஒரு விசேஷத்திற்காக ஜனனி சென்றுவிட்டார். வீட்டிலிருந்த மேகலா திடீரென மாயமானார். அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மேகலா தங்கி இருக்கும் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் மேகலா கிடந்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர், முன்பே மேகலா இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.