Skip to main content

கடற்புலிகள் இல்லை... இலங்கை வழியாக பயங்கரவாதிகள் ஊருவல்... கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனை தீவிரம்!

Published on 23/08/2019 | Edited on 23/08/2019

இலங்கை கடலில் கடற்புலிகள் இல்லாத நிலையில் தற்போது அடிக்கடி கடத்தல்கள், பயங்கரவாதிகள் ஊடுருவல் என்று இந்தியாவுக்கான அனைத்து அச்சுருத்தல்களும் தமிழ்நாட்டு கடல் வழியாகவே தொடங்கியுள்ளது. தற்போது 6 பயங்கரவாதிகள் இலங்கை வழியாக தமிழ்நாட்டில் கோவையில் ஊடுருவியுள்ளதாக கூறி கார்களின் எண்கள், 3 பேரின் படங்களையும் போலிசார் வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில்தான் கிழக்கு கடற்கரைச் சாலையில் வாகனச் சோதனைகள் தீவிரமடைந்துள்ளது.

 

police

 

விடுதலைப்புலிகள் கடலில் பாதுகாப்புக்கு சுற்றி வரும்போது இந்தியா பாதுகாக்கப்பட்டது. அவர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டு கடல் வழியாக எந்த அச்சுருத்தலையும் செய்ய முடியவில்லை. இனி அவர்கள் இல்லை என்பதால் பயங்கரவாதிகளும், எதிரி நாடுகளின் அச்சுருத்தல்களும் தமிழக கடலவழியாகவே நடக்கும் என்று பன்னாட்டு கூட்டு சதியால் விடுதலைப்புலிகளையும், ஈழத்தமிழர்களையும் கொன்று குவித்தபோது ஒரு முன்னாள் கடற்படை வீரர் சொன்னார். அவர் சொன்னது போலவே நடக்க தொடங்கி உள்ளது.

அதாவது சர்வதேச கடத்தல்கள் அனைத்தும் இலங்கை வந்தே வெளியேற்றப்படுகிறது. போதைப் பொருட்கள், தங்கம் அனைத்தும் இலங்கை வழியாகவே வெளியேறும். 10 ஆண்டுகளுக்கு முன்புவரை இலங்கைக்கு பெண்களை சிறு வியாபாரிகளாக அழைத்துச் சென்ற கடத்தல்காரர்கள் அங்கிருந்து திரும்பி வரும் போது தங்கம் போன்ற கடத்தல் பொருட்களை கருப்பு கார்பன் பேப்பர்களில் சுற்றி பெண்களின் மர்ம உறுப்புகளில் மறைத்து வைத்து விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அனுப்பினார்கள். கருப்பு கார்பன் பேப்பர் விமான நிலையங்களில் உள்ள ஸ்கேனர்களில் தெரியாது என்பதால் அப்படி செய்யப்பட்டது. அந்த பெண்கள் விமானநிலையத்தில் இருந்து வெளியே வரும்போது அவர்களுக்கு கொடுக்கப்படும் தகவல்களின் படி அந்த கடத்தல் பொருள் கொண்டு போய் சேர்க்கப்படும். இதற்காக அவர்களுக்கு ஒரு முறை சென்று வர பயணக்கட்டணம் போக ரூ. 5 ஆயிரம் வரை சன்மானம் வழங்கப்பட்டது. 

 

police

 

அதன் பிறகு கடலில் கடற்புலிகள் இல்லை என்ற நிலையில் ஆந்திராவில் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்யப்படும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களும், தடை செய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்களும் தமிழக கடல் வழியாக இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதேபோல கஞ்சா வாங்க இலங்கையில் இருந்து பலர் சொந்த விசைப் படகுகளில் வந்துதங்கி இருந்து வாங்கிச் சென்றனர். இப்படி அடிக்கடி கடத்தல் வணிகம் இந்திய கடலில் நடக்கத் தொடங்கியது. வேதாரண்யம் அருகே கஞ்சாவுக்கு பணம் கொடுக்கவில்லை என்று இலங்கை இளைஞர் ஒருவரை தனிமைச் வீட்டுச்சிறையில் 18 மாதங்கள் வைத்திருந்த சம்பவம் சில மாதங்களுக்கு முன்புதான் நடந்தது. 

இப்படி அடிக்கடி கடத்தல் சம்பவங்கள் கடற்கரையில் நடக்கிறது. ஆனாலும் சில காவல் துறையினர் அவற்றை விரட்டிப் பிடிக்கத்தான் செய்கிறார்கள். அதையும் மீறி இப்படி நடந்துவிடுகிறது. இந்த நிலையில்தான் தற்போது இலங்கையை சேர்ந்த 5 பேர், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் என 6 பேர் கொண்ட பயங்கரவாதிகள் இலங்கையில் இருந்து தமிழக கடல்வழியாக வந்து தமிழ்நாட்டு பதிவு  எண் கொண்ட கார்களில் கோவை மாவட்டத்திற்குள் ஊடுருவியுள்ளனர் என்ற தகவலை காவல் துறையினர் படங்களுடன் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த தகவலையடுத்து கிழக்கு கடற்கரை சாலையில் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி, திருப்புனவாசல் உள்ளிட்ட கடலோர பாதுகாப்பு குழும போலிசார் ஆய்வாளர் அன்னலட்சுமி, உதவி ஆய்வாளர்கள் ஜவகர், ராஜ்குமார் மற்றும் போலிசார் மும்பாலை சோதனைச் சாவடியில் சாலைகளில் தீவிர வாகன சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் கோடியக்காடு, அம்மாபட்டிணம் பகுதியலும், கடலுக்குள்ளும் ரோந்துப் பணிகளில் தீவிரம்காட்டியுள்ளர். இதேபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் கடலோரங்களில் தீவிர சோதனைகள் செய்யப்பட்டு வருவதுடன் உள் மாவட்டங்களிலும் முக்கிய சாலைகள், முக்கிய இடங்களிலும் சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராஜேஷ் தாஸ் குற்றவாளி! சரணா? கைதா? - இறுதிக்கட்டத்தில் பாலியல் வழக்கு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police are serious to arrest the accused Rajesh Das

கடந்த அதிமுக ஆட்சியில் சிறப்பு டிஜிபியாக இருந்தவர் ராஜேஷ் தாஸ். அவர், அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் டெல்டா மாவட்ட சுற்றுப்பயணத்தை கவனித்துக் கொண்டார். அப்போதைய முதல்வருடன் டெல்டா மாவட்டத்துக்கு பாதுகாப்பு பணியை மேற்கொள்ள ராஜேஷ் தாஸ் உடன் சென்றிருந்தார். அப்போது, மரியாதை நிமித்தமாக டெல்டா மாவட்டத்தில் பணியாற்றிய பெண் எஸ்.பி ஒருவர் ராஜேஷ் தாஸை சந்தித்துள்ளார். ஆனால், அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ராஜேஷ் தாஸ் காரில் வைத்து பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதைச் சற்றும் எதிர்பாராத அந்த பெண் எஸ்பி புகார் அளிக்க சென்னை சென்றார். அப்போது, வழியில் மறித்த அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி கண்ணன் ராஜேஷ் தாஸுக்கு ஆதரவாக சமாதானம் பேசி பெண் எஸ்பியிடம் கட்டப் பஞ்சாயத்து செய்துள்ளார். இப்படி, பல மிரட்டலையும் மீறி பாலியல் தொல்லைக்கு ஆட்பட்ட பெண் எஸ்பி, அப்போதைய டிஜிபி திரிபாதியைச் சந்தித்து தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து துணிச்சலுடன் புகார் அளித்தார். இதையடுத்து, ராஜேஷ் தாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் ராஜேஷ் தாஸுக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதில், பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியை தடுத்து புகார் அளிக்க இடையூறு செய்த அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி கண்ணனுக்கு 500 ரூபாய் மட்டும் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து, விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றமும் ராஜேஷ் தாஸுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்தது. ஆனால், ராஜேஷ் தாஸ் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும், சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், காவல்துறையினர் குடிமக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், ராஜேஷ் தாஸ் காவல்துறையின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் செயல்பட்டிருக்கிறார். இதன் காரணமாக, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதனால், ராஜேஷ் தாஸ் சிறை செல்வது உறுதியானது. இதையடுத்து, வழக்கை விசாரணை செய்து வந்த சிபிசிஐடி போலீஸார் பாலியல் குற்றவாளி ராஜேஷ் தாஸை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, தண்டனை தீர்ப்பு உறுதியான பிறகு ராஜேஷ் தாஸ் வடமாநிலங்களில் தலைமறைவாக இருந்ததாக சொல்லப்பட்டது. அவரை பிடிக்க போலீசார் அங்கு விரைந்தனர். ஆனால், அதற்குள் ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் அவரைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது தண்டனை உறுதியானதால் ராஜேஷ் தாஸ் எங்கு இருக்கிறார் என்று தனிப்படை போலீஸார் விசாரணை செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ராஜேஷ் தாஸ் நீதிமன்றத்தில் சரண் அடையலாம் என்றும், அப்படி இல்லை என்றால் உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, ராஜேஷ் தாஸ் வழக்கு குறித்து சட்ட நிபுணர்களுடனும், காவல்துறை உயரதிகாரிகளுடனும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, போலீசாரின் தேடுதல் வேட்டை தீவிரமடைந்திருப்பதால் ராஜேஷ் தாஸ் தலைமறைவாக இருந்தாலும், கைது செய்யப்படுவார் என சிபிசிஐடி காவல் துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.