சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாகபொன்.மாணிக்கவேல் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்தும், சிலைகடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரியும்தமிழகஅரசு உச்சநீதிமன்றத்தில்மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கில் இன்றுதீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ள நிலையில்,சிலைகடத்தல் வழக்கை சிபிஐக்கு மற்ற கோரிய தமிழக அரசின் அரசாணையை ரத்துசெய்து தீர்ப்பளித்துள்ளது உச்சநீதிமன்றம்.

 No objection to interrogation: No power to arrest: court verdict on pon.manikavel case

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

ஓய்வு பெற்ற பிறகு சிலை கடத்தல் வழக்குகளில் சிறப்பு அதிகாரியாக பொன்மாணிக்கவேல் நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்படிசிறப்பு அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டதற்கு எதிராகவும்,சிலைகடத்தல் வழக்கை சிபிஐக்கு மற்ற கோரியும்தமிழக அரசு தொடுத்த வழக்கில்உயர்நீதிமன்றம் இந்த உத்தரவு செல்லும் அரசு அவருக்கு ஒத்துழைக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

இன்றுஇந்த வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில்சிலைகடத்தல் வழக்கை சிபிஐக்கு மற்ற கோரிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்த உச்சநீதிமன்றம் சிலைகடத்தல் வழக்குகளைபொன்மாணிக்கவேல் தொடரலாம் ஆனால்விசாரணையின் போது கைது செய்யும் அதிகாரம் இல்லை என கூறப்பட்டுள்ளது.