ADVERTISEMENT
ADVERTISEMENT
ஹெல்மட் குறித்த பலவேறு விழிப்புணர்வுகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஹெல்மட் அணியாமல் சாலைகளில் பயணிப்போர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இந்நிலையில், 'ஹெல்மட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை' என்ற வாசகத்தை பெட்ரோல் பங்குகளில் காட்சிப்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பெட்ரோல் பங்குகளில், 'ஹெல்மட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை' என்ற வாசகத்தைக் காட்சிப்படுத்த போக்குவரத்துக் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 'சீட் பெல்ட் இல்லை என்றால் பெட்ரோல், டீசல் இல்லை' எனவும் பதாகை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இந்த உத்தரவு சென்னைக்கும் மட்டும் பொருந்தும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Show comments