பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக தமிழ்நாட்டில் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், " பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக பொதுமக்களுக்கு சிரமத்தைத் தர அரசு விரும்பவில்லை. விலை உயர்வைக் காரணமாக வைத்து பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு தற்போதைக்கு இல்லை. நேற்று ஒரே நாளில் 27 மாவட்டங்களைச் சேர்ந்த 22 லட்சம் பேர் பேருந்தில் பயணம் செய்துள்ளார்கள். மக்களின் வசதிக்கு ஏற்ப பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படும்" என்றார்.