Skip to main content

இந்தி திணிப்பு இல்லை... நிர்மலா சீதாராமன் பேட்டி!

Published on 20/07/2019 | Edited on 20/07/2019

 

இன்று சென்னை வந்த நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போதுபேசுகையில்,

நகர சமூகத்தார் மீட்டிங்கிற்கு என்னை வர சொல்லி வேண்டுகோள் விடுத்திருந்தார்கள். இந்த சந்திப்பில் கலந்துகொள்கிறேன். இன்றே பட்ஜெட் செஷன் நடைபெற இருப்பதால் கிளம்பிவிடுவேன். நகரத்தார் தொழிலுக்கு உலக அளவில் பாரதா நாட்டின் புகழை கொண்டு சேர்த்த ஒரு சமூகம்.அதனால் அவர்கள் மீட்டிங்கில் கலந்துகொள்வதில் எனக்கு மகிழ்ச்சி.

 No Hindi stuffing ... Nirmala Sitharaman Interview!

தமிழகத்தில் இந்தி திணிப்பா என்ற கேள்விக்கு...?

இந்தி திணிப்பு என்பதெல்லாம் சரியான குற்றச்சாட்டு இல்லை. மத்திய அரசு இந்தி திணிப்பு செய்வதில்லை ஆனால் எங்காவது ஒரு இடத்தில், குறிப்பாக அண்மையில் அஞ்சல்துறை தேர்வு பற்றி பெரிய விவாதம் வசந்துச்சு இதற்கு நான் பார்லிமென்டில் கூட எழுந்து பதில் சொல்லியிருக்கிறேன். எங்காவது இதுபோன்ற விஷயம் நடந்ததென்றால் அப்படி நடக்கிறதே அது தெரிஞ்சு செய்ததா அல்லது தெரியாமல் செய்ததா என  கேட்பதில் தப்பொன்றுமில்லை. ஆனால் உடனடியாக இந்தி திணிப்பு என்ற கருத்துக்கு வருவது சரியில்லை.  

உண்மையில் மோடி அரசில் ''சிரேஷ்ட பாரத்'' என்ற ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. அந்த நிகழ்ச்சி ஒரு மாநிலத்தின் மொழியை மற்றோரு மாநில மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என ஏற்பாடு செய்யப்படுகிறது. அதில் தமிழ்மொழியை கூட வடமாநிலத்தில் பரப்ப முயற்சி நல்லா நடந்திருக்கிறது. எனவே இதுபோன்று நடந்துவிட்டால் உடனே திணிப்பு என்ற முடிவுக்கு வரவேண்டாம். எனவே இந்தி திணிப்பு இல்லை தமிழை வளர்க்க என்ன முயற்சி இருக்கோ அதில்  நாங்களும் ஈடுபடுகிறோம் என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.