பேனருக்கு பதிலாக ஹெல்மெட் வழங்க சூர்யாவின் ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
சூர்யாவின் புதிய திரைப்படம் வெளியாகும், அன்றைய தினம் 200 ஹெல்மெட்கள் வழங்கப்படும் என்று சூர்யாவின் ரசிகர்கள் அறிவித்துள்ளனர். நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் கோரிக்கையை ஏற்று ரசிகர்கள் அறிவித்துள்ளனர்.
புதிய திரைப்படம் வெளியாகும் போது பிளக்ஸ் பேனர், கட்அவுட் வைப்பதிற்கு பதிலாக மக்களுக்கும் ரசிகர்களுக்கும் தரமான "ஹெல்மெட்" வழங்கினால் அவர்களே உடனடியாக உண்மையான "காப்பான்" ஆக முடியும் என்று நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் ட்வீட்.