'No drinking water for a month'  Legislator who SOLUTION within 24 hours!

திருச்சி மாவட்டம், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருப்பவர் இனிகோ இருதயராஜ். சட்டமன்றத்தில் திருச்சிக்காக குரல் கொடுத்தது முதல் தொகுதி மக்களின் நலனுக்காகவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதைத் தொடர்ந்து பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்றும், உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியும் வருகிறார்.

Advertisment

இந்த நிலையில் திருச்சி விமான நிலையம் அருகே சுதானா பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நல்ல குடி தண்ணீர் வரவில்லை என நேற்று (07/08/2021) கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் புகார் அளித்த 24 மணி நேரத்தில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு துரிதமாக நடவடிக்கை எடுத்து நல்ல குடி தண்ணீரை அப்பகுதி மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினரின் துரித நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

Advertisment