Skip to main content

முதல்வரை வரவேற்க ஆள் பற்றாக்குறை... கூட்டத்தை திரட்ட கல்லூரிக்கு ஓடிய அமைச்சர்!! 

Published on 01/02/2020 | Edited on 01/02/2020

ஜனவரி 31ந் தேதி சென்னையில் இருந்து ஆந்திரா மாநிலம் திருப்பதி திருமலைக்கு குடும்பத்துடன் சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பெருமாளை தரிசனம் செய்துவிட்டு, பிப்ரவரி 1ந்தேதி காலை அங்கிருந்து புறப்பட்டு சித்தூர், வேலூர், வாணியம்பாடி வழியாக தனது சொந்த ஊரான சேலம் எடப்பாடிக்கு சென்றார்.

 

No crowd to welcome chief minister... Minister who ran to the college to raise the crowd

 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும்போது அமைச்சர் நிலோபர்கபில் வரவேற்பு தர ஏற்பாடு செய்திருந்தார். மதியம் 11.30 மணியளவில் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடியில் நின்றுயிருந்தபோது, கட்சியினர் ஆயிரம் பேருக்குள்ளே முதல்வரை வரவேற்க வந்திருந்தனர். இதனைப்பார்த்து அதிர்ச்சியான அமைச்சர் நிலோபர் தன்னுடன் இருந்த கட்சியினரை திட்டினார். தற்போது உடனடியாக கூட்டத்தை சேர்க்க முடியாதே என தவித்தவர், திடீரென தன் பாதுகாவலர், உதவியாளருடன் ஓட்டமும் நடையுமாக நடக்க தொடங்கினார்.

 

No crowd to welcome chief minister... Minister who ran to the college to raise the crowd

 

வரவேற்பு வழங்கப்படும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் இஸ்லாமிய மகளிர் கல்லூரி உள்ளது. அங்குதான் ஓட்டமும் நடையுமாக சென்றார். கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகத்தினர், கல்லூரிக்கு வந்த அமைச்சரை பார்த்து ஆச்சர்யமும், அதிர்ச்சியும் அடைந்தனர். முதல்வர் வரவேற்புக்கு மாணவிகளை அனுப்ப வேண்டும் என வேண்டுக்கோள் போல் உத்தரவாக கேட்டுக்கொண்டார். அமைச்சரை பகைத்துக்கொள்ள முடியாது என்பதால் கல்லூரி நிர்வாகம் சரியெனச்சொல்லி தமிழக முதல்வரை வரவேற்க மாணவிகள் சென்று வரவேண்டும் எனச்சொல்லியுள்ளனர். அதனை தொடர்ந்து 500 மாணவிகளுடன் வரவேற்பு இடத்துக்கு அழைத்து வந்த அமைச்சர் நிலோபர் கபில் அவர்களை அழைத்து வந்து, அவர்களை சாலையின் ஓரம் நிறுத்தினார்.

 

No crowd to welcome chief minister... Minister who ran to the college to raise the crowd

 

சிறிது நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காரில் வந்தார். முதல்வருக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் கட்சியினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதைத்தொடர்ந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவிகளுக்கு முதல்வர் கையசைத்து, அவர்களை நோக்கி கும்பிட்டார்.

 

No crowd to welcome chief minister... Minister who ran to the college to raise the crowd

 

அதேநேரத்தில், முதல்வரிடம், வாணியம்பாடியை சேர்ந்த தன்ஜீமெ மஸாஜித் ஆஹ்லே சுன்னத்  வல் ஜமாத்  (TANZEEM -E-MASAJID AHLE SUNNATH WAL JAMATH)  அமைப்பின் சார்பில் குடியுரிமை அரசியலமைப்புச் சட்டம் திரும்பப் பெறக்கோரி மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் சரியென புறப்பட்டு சென்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.