Skip to main content

“தமிழகத்தில் இனி ஆட்சி மாற்றமே கிடையாது!” - தேசிய தவ்ஹீத் ஜமாத் கூட்டமைப்பு தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் பேச்சு!

Published on 05/01/2021 | Edited on 05/01/2021

 

 

"தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்பது கண்டிப்பாக இருக்காது. ஏனென்றால், ஏற்கனவே அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் தன் வசதிகேற்ப தயார்ப்படுத்தி வைத்திருக்கிறது பாஜக" என தேசிய தவ்ஹீத் ஜமாத் கூட்டமைப்புத் தலைவர் ஜெய்னுல் ஆபிதீன்  கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

மேலும், "வளர்ந்த நாடுகளில் வாக்குப்பதிவு சீட்டு முறை அமலில் இருக்கும்போது, வளரும் நாடான இந்தியாவில் எதற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும். அனைத்துக் கட்சிகளும் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்" என தேசிய தவ்ஹீத் ஜமாத் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழகம், புதுவை, கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட 19 மாநிலங்களைச் சேர்ந்த செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

 

கூட்டத்தில் பேசிய கூட்டமைப்பு தலைவர் ஜெய்னுல் ஆபிதீன், "விவசாயம் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, மத்திய அரசு இதில் மூக்கை நுழைத்து மாநில அரசினுடைய அதிகாரங்களைப் பிடுங்கி, தற்போது வலுக்கட்டாயமாக இந்தப் புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. மாநில கட்டுப்பாட்டில் இருந்தவரை விவசாயிகளுடைய அனைத்து உற்பத்திப் பொருட்களும் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்தச் சட்டத்தின் மூலம் விவசாயிகள் மட்டுமல்ல பொதுமக்களும் பாதிக்கப்படுவோம். இன்று 50 ரூபாய்க்குப் பெறப்படும் ஒரு கிலோ அரிசி, நாளை தனியாருக்குத் தாரை வார்க்கும்போது 500 ரூபாய்க்கு வாங்கவேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படுவோம்.

 

மேலும் இந்தக் கூட்டத்தில், மூட நம்பிக்கை ஒழிப்பு, மூடநம்பிக்கை மீதான நம்பிக்கையை இஸ்லாமியர்களிடம் இருந்து அகற்ற வேண்டும் என்பதை தொடர்ந்து முன்வைத்து வருவதாகவும், வருகின்ற ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி திருச்சியில் மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப் போவதாக பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து முயற்சிசெய்து வருவதாகவும், அதன் முன்னோடி திட்டமான தேசிய குடியுரிமை பதிவு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் வாக்குச் சீட்டு மூலம் தேர்தலை நடத்துகின்றன.

 

இந்த முறையை இந்திய அரசும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால் குறைந்த காலத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் செய்வோர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களுடைய வாழ்க்கைத் தரமும் தொழிலும் முன்னேற, வட்டியில்லாத நீண்டகால கடன் வழங்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்குக் கோரிக்கை முன்வைத்துள்ளனர். ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் என்றும், எரிவாயு விலையேற்றம் பொது மக்களைப் பெரிய அளவில் பாதித்துள்ளது 

 

cnc

 

‘லவ் ஜிஹாத்’ என்ற வார்த்தை ஆபத்தானது. அதிலும் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ‘ஜிஹாத்’ என்ற வார்த்தையைக் கொச்சைப்படுத்தி, மதவெறியுடன் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்டாய மதமாற்றம் கண்டிக்கத்தக்கது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை இருப்பினும் ஆர்எஸ்எஸ் சங்பரிவார கும்பல் முஸ்லிம்களைக் கத்திமுனையில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்லச் சொல்வதை தவ்ஹீத் ஜமாத் வன்மையாகக் கண்டிக்கிறது" என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.