Skip to main content

பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு பணி வழங்கக் கோரி என்.எல்.சி அலுவலகம் முற்றுகை

Published on 20/10/2022 | Edited on 20/10/2022

 

NLC office demanding employment for sacked workers

 

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இந்தியா  நிறுவனத்தில்  சாலை பராமரிப்பு பிரிவில் சுமார் 35 தொழிலாளர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். இங்கு  பணியாற்றும் தொழிலாளர்களின் ஏ.டி.எம் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், அடையாள அட்டை உள்ளிட்டவைகளை சாலை பராமரிப்பு பணிகளை  என்.எல்.சியிடமிருந்து ஒப்பந்தம் எடுத்துள்ள ஒப்பந்ததாரர் வாங்கி வைத்துக் கொண்டு தொழிலாளர்களுக்கு என்.எல்.சி வழங்கும் ஊதியத்தை குறைவாக கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

 

மேலும் ஒப்பந்ததாரர்களிடம் ஏ.டி.எம் கார்டு, வங்கி புத்தகம் உள்ளிட்டவைகளை தர மறுத்த 8 தொழிலாளர்களை கடந்த ஒரு ஆண்டு காலமாக  பணியில் இருந்து நீக்கி உள்ளனர். இதனை கண்டித்து என்.எல்.சி பொது காண்ட்ராக்ட் தொழிலாளர் ஊழியர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நெய்வேலி நகர நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. நுழைவாயில் முன்பு காவல்துறையினர் தடுத்து நிறுத்தி தொழிலாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர்.

 

அப்போது தொழிலாளர்கள் ஊழியர் சங்கத்தினர் கூறியதாவது  " பணியில் இருந்து நீக்கிய எட்டு தொழிலாளர்களுக்கும்  பாண்டிச்சேரியில் தொழிலாளர் நல அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்  மீண்டும் வேலை வழங்க வேண்டும் என எழுத்து மூலம் அறிவுறுத்தியுள்ளனர்.  இதுவரை என்.எல்.சி நகர நிர்வாக‌ம் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கவில்லை. மேலும் தமிழக முதலமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர், மத்திய தொழிலாளர் நல ஆணையர்களுக்கு பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது. குறிப்பாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள நிலுவைத் தொகையை எடுக்க முடியாமல்  நிறுத்தி வைத்துள்ளனர். காண்ட்ராக்ட் முதலாளிகளுக்கு என்.எல்.சி அதிகாரிகள் ஆதரவாக செயல்படுகின்றனர். பாதிக்கப்பட்ட 8 தொழிலாளர்களுக்கும் 10 நாட்களுக்குள் வேலை வழங்காவிட்டால் என்.எல்.சி நிர்வாகத்தைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும்" எனத் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.