ADVERTISEMENT

என்.எல்.சி. விபத்தில் மேலும் இருவர் பலி! உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

11:21 AM Jul 06, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 01-ஆம் தேதி, நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் 5-ஆவது அலகிலுள்ள கொதிகலன் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 6 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 17 பேர் தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் நெய்வேலி நகரியம் 7-ஆவது வட்டத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்ற துணைத் தலைமைப் பொறியாளராக பணியாற்றி வந்தவர் 02.06.2020 அன்று உயிரிழந்தார். இன்ட்கோசெர்வ் தொழிலாளி செல்வராஜ் என்பவரும், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.

இந்நிலையில் நிரந்தரத் தொழிலாளி ரவிச்சந்திரன் என்பவரும், இன்ட்கோசெர்வ் தொழிலாளி தொப்புளிக்குப்பம் இளங்கோவன் என்பவரும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து என்.எல்.சி. கொதிகலன் வெடித்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT