கடலூரில் என்.எல்.சி இரண்டாவது சுரங்க ஊழியர் பழனிவேல் என்பவரை அவரது மனைவியே அடித்துக் கொலை செய்து நாடகமாடிய சம்பவம் நடந்துள்ளது. இந்த கொலை வழக்கில் அவரது மனைவி அஞ்சலை உள்பட நான்கு பேர் சேர்ந்து பழனிவேலை அடித்துக் கொன்றதாக போலீஸ் விசாரணையில் தகவல்கள் வந்துள்ளது.
கொலை தொடர்பாக விசாரணை நடத்தும் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ்சார் இதில் சம்பந்தமுடைய மற்ற மூன்று பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பழனிவேலின் சடலம் விழுப்புரம் சின்னசேலம் அருகே கண்டெடுக்கப்பட்டது. திட்டமிட்ட கொலையை மறைத்து விபத்து என நாடகமாடியதும் தெரியவந்துள்ளது. செம்பாக்குறிச்சி வனப்பகுதியில் பழனிவேல் சடலத்துடன் காரை எரிக்க முயன்றதும் தெரியவந்துள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.