நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை... மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைக் கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்

nivar cyclone rains ips officers dgp order

நிவர் புயல் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை கண்காணிக்க 13 மாவட்டங்களுக்கு ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமித்து தமிழக காவல்துறை டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு அன்பு ஐ.பி.எஸ்., திருவள்ளூர் மாவட்டத்திற்கு வனிதா ஐ.பி.எஸ்., விழுப்புரம் மாவட்டத்திற்கு சத்யபிரியா ஐ.பி.எஸ்., கடலூர் மாவட்டத்திற்கு நாகராஜன் ஐ.பி.எஸ்., திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு ராஜேஸ்வரி ஐ.பி.எஸ்., சாரங்கன் ஐ.பி.எஸ்., புதுக்கோட்டை மாவட்டத்திற்கு லலிதா லட்சுமி ஐ.பி.எஸ்., தஞ்சை மாவட்டத்திற்கு செந்தில்குமாரி ஐ.பி.எஸ்., திருவாரூர் மாவட்டத்திற்கு தமிழ்ச்சந்திரன் ஐ.பி.எஸ்., நாகை மாவட்டத்திற்கு ஜெயராம் ஐ.பி.எஸ்., சென்னை மாவட்டத்திற்கு விஸ்வநாதன் ஐ.பி.எஸ்., நியமிக்கப்பட்டுள்ளனர்.

heavy rain IPS OFFICERS nivar cyclone
இதையும் படியுங்கள்
Subscribe