Skip to main content

'நிவர்' புயல் களத்தில் இடைவிடாத சீரமைப்புப் பணி... சென்னை மாநகராட்சிக்கு குவியும் பாராட்டுகள்!

Published on 28/11/2020 | Edited on 28/11/2020

 

nivar cyclone chennai corporation worker did great job says public


தலைநகர் சென்னையில், 'நிவர்' புயல் தாக்குதலை சமாளிக்க இதுவரை இல்லாத வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டன. வானிலை ஆய்வு மையங்களின் அறிவிப்புகளை தொடர்ந்து, நிவர் புயலைச் சமாளிக்க வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரப்படுத்துமாறு மாநகராட்சி நிர்வாகத்துக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டிருந்தார். 

 

nivar cyclone chennai corporation worker did great job says public


மேலும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தி, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்தார். வழக்கமாக மழை நீர் தேங்கும் பகுதிகளில் மழை நீரை உடனே எந்திரங்கள் மூலம் அகற்ற வேண்டும், புயல் காற்றில் சாலையில் சாயும் மரங்களை வெட்ட நவீனக் கருவிகளை பயன்படுத்த வேண்டும், தாழ்வான ஆற்றங்கரையோரத்தில் வசிப்பவர்களையும், வீடற்றவர்களையும் மீட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைத்துப் பராமரிக்க வேண்டும் என மாநகராட்சிப் பணியாளர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டார். 


'புயல்' பாதிப்பு குறித்து பொதுமக்களுக்கு உதவும் வகையில், 24 மணி நேரமும் இயங்கும் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை மூலம் கிடைக்கும் தகவல் அடிப்படையில், உடனுக்குடன் களப் பணியாற்றவும் அமைச்சர் வேலுமணி அறிவுறுத்தியிருந்தார். புயல் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 வேளையும் அம்மா உணவகங்கள் வழியாக உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் அமைச்சர் வேலுமணி துரிதப்படுத்தியிருந்தார். இதைத் தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட பிறகும், 'நிவர்' புயல் கரையைக் கடக்கும்போதும், கடந்த பிறகும், ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்கும் பணியில், சென்னை மாநகராட்சிப் பணியாளர்கள் களைப்பின்றி பணியாற்றி வருகின்றனர்.


முக்கியச் சாலைகள், சுரங்கப் பாதைகளில் தேங்கிய மழை நீரை, நவீன எந்திரங்கள் மூலம் அகற்றினர். சாலைகளில் விழுந்து கிடந்த மரங்களை, நவீனக் கருவிகளால் வெட்டி நள்ளிரவு வரை அப்புறப்படுத்தினர். இதனால், மறுநாள் பல முக்கியச் சாலைகள், சுரங்கப் பாதைகள், வீதிகளில் மழை நீர் வடிந்திருந்தது. மேலும் சாலையில் விழுந்து கிடந்த மரங்கள் உடனுக்குடன் அகற்றப்பட்டு, போக்குவரத்துச் சீரமைக்கப்பட்டது. புயல் கரையைக் கடந்த அன்று நள்ளிரவு வரை களப்பணியாற்றிய சென்னை மாநகராட்சி பணியாளர்கள், மறுநாள் காலை 6 மணி முதல் களத்திற்கு வந்து சீரமைப்புப் பணிகளில் இடைவிடாமல் பணியாற்றி வருகின்றனர். 


பல இடங்களில் பேரிடர் மேலாண்மைத் துறை, மின்சாரத் துறை, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, பொதுப்பணித் துறை மற்றும் காவல்துறையுடன் இணைந்து மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சிப் பணியாளர்களின் களைப்பில்லாத களப்பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டினார். 

 

nivar cyclone chennai corporation worker did great job says public


'நிவர்' புயலின் தாக்கம் அதிகமாக இருந்தபோதிலும் பேரிடர் காலத்தில் மக்களின் நலன் கருதி துரிதமாகவும், அற்பணிப்புடனும் பணியாற்றும் மாநகராட்சிப் பணியாளர்கள் அனைவரையும் என் சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார். 
 

சென்னை மாநகராட்சியின் துரிதப் பணியைப் பாராட்டும் நெட்டிசன்,
 

nivar cyclone chennai corporation worker did great job says public

 

cnc

 

இதே போல், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் சென்னை மாநகராட்சி பணியாளர்கள் அனைவருக்கும் பாராட்டுத் தெரிவித்தார். மேலும், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரும், சென்னை மாநகராட்சியின் 'நிவர்' புயல் பாதிப்புகளைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். சென்னை மாநகராட்சியின் திட்டமிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நவீன எந்திரங்கள், கருவிகளுடன் சீரமைப்புப் பணியில் அர்ப்பணிப்புடன் இடைவிடாது ஈடுபட்ட நடவடிக்கைகளுக்கு சமூக வலைதளங்களிலிலும் நேரிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.